விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Friday, August 3, 2012

    3 முதல்-மந்திரிகளுக்கு கல்தா: பாராளுமன்ற தேர்தலுக்கு சோனியா வியூகம்


    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 5 ஆண்டு பதவிக்காலம் 2014-ம் ஆண்டு மே மாதம் முடிய உள்ளது. எனவே 2014-ம் ஆண்டு தொடக்கத்தில் பாராளு மன்றத்துக்கு தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இதற்கு இன்னும் சுமார் 20 மாதங்களே காலஅவகாசம் உள்ளது. 

    2014-ம் ஆண்டு பாராளு மன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் சோனியா தீவிரமாக உள்ளார். பாரதீய ஜனதா கட்சியும் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக இப்போதே வியூகம் வகுக்க தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக உத்தர பிரதேச மாநிலத்தில் போட்டியிட உள்ள 80 தொகுதி வேட்பாளர்களை வரும் டிசம்பர் மாதம் அறிவிக்க பாரதீய ஜனதா மூத்த தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். 

    மாநிலங்களில் செல்வாக்குடன் திகழும் கட்சிகளிடம் கூட்டணி ஏற்படுத்தும் பணிகளையும் பா.ஜ.க. தலைவர்கள் தொடங்கி விட்டனர். தற்போது நாடெங்கிலும் நிலவும் சமூக - பொருளாதார சூழ்நிலைகள் பாரதீய ஜனதாவுக்கு சாதகமாக உள்ளன. எனவே அதை பயன்படுத்திக் கொள்ள பா.ஜ.க. ஓசையின்றி திட்டமிட்டு வருகிறது. மக்களை மலைக்க வைத்த ஊழல் குற்றச்சாட்டுக்கள், அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான விலை உயர்வு மற்றும் மாநில மக்களின் உணர்வுகளுக்கு எதிரான போக்கு உள்பட பல்வேறு விஷயங்களால் நாடெங்கும் காங்கிரஸ் கூட்டணி அரசு மீது மக்களுக்கு கடும் அதிருப்தி நிலவுகிறது. இது 2014 பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் சில குறைபாடுகளை நிவர்த்தி செய்ய சோனியா முடிவு செய்துள்ளார். 

    இதற்காக அவர் காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றங்கள் செய்ய ஆலோசித்து வருகிறார். மத்திய அரசில் விரைவில் ராகுல் காந்தி முக்கியப் பொறுப்புக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு ஏற்ப மாற்றங்கள் செய்ய சோனியா திட்டமிட்டுள்ளார். அதன்படி நாடெங்கும் இளைஞர்களை அதிக அளவில் கட்சிப் பணிகளில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. தோழமைக் கட்சிகளின் குடைச்சலால் பல தடவை எரிச்சலுக்குள்ளான சோனியா 2014-ல் தனிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் அமர வேண்டும் என்று நினைக்கிறார். அதை நிறைவேற்ற வேண்டுமானால் சில பெரிய மாநிலங்களில் வெற்றி வாய்ப்பை அதிகரிக்க செய்ய வேண்டும். இதற்காக மாநில காங்கிரஸ் அமைப்புகளில் அதிரடி மாற்றங்கள் செய்ய சோனியா ஆலோசித்து வருகிறார். 

    முதல் கட்டமாக ஆந்திரா, ராஜஸ்தான், மராட்டியம் ஆகிய 3 மாநிலங்களை அவர் ஆய்வு செய்து வருகிறார். இந்த 3 மாநிலங்களிலும் முதல்-மந்திரிகளின் செயல் பாடுகள் காங்கிரசுக்கு நல்ல பெயர் பெற்றுத் தரும் வகையில் இல்லை என்று அவர் உணர்ந்துள்ளார். எனவே ஆந்திர முதல்- மந்திரி கிரண்குமார் ரெட்டி, மராட்டிய முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான், ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் ஆகிய மூவருக்கும் கல்தா கொடுக்க சோனியா முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

    3 மாநிலங்களிலும் புதிய முதல்வர்களை நியமித்து காங்கிரசில் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் காங்கிரஸ் வாக்குகளை ஜெகன்மோகன்ரெட்டி கணிசமான அளவுக்கு தன் பக்கம் கொண்டு சென்று விட்டார். சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல் முடிவுகள் மூலம் ஆந்திர மக்கள் காங்கிரசை விட ஜெகன் மோகனையே அதிகம் விரும்புவது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 

    எனவே மக்களிடம் செல்வாக்கு பெற்றுத் திகழும் ஜெகன்மோகனை மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர வைக்க சோனியா தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இதற்கான பேச்சுவார்த்தைகளை ஜெகன்மோகன் கட்சியினருடன் காங்கிரஸ் தலைவர்கள் நடத்தி வருகிறார்கள். அதில் உடன்பாடு ஏற்படுமா? என்று தெரியவில்லை. 

    இதற்கிடையே காங்கிரசில் மீண்டும் சேரும் திட்டம் இல்லை என்று ஜெகன்மோகன் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு செல்வாக்கு பெருகுவதைத் தடுக்கவே இந்த வதந்தியை காங்கிரசார் கிளப்பி விட்டுள்ளனர் என்று ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். 

    என்றாலும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசை, மீண்டும் காங்கிரசுடன் சேர்க்க முயற்சிகள் நடந்து வருகிறது. இதுபற்றி கருத்து தெரிவிக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மறுத்து விட்டனர். அதுபோல ராஜஸ்தான், மராட்டிய மாநிலங்களில் செய்ய போகும் அதிரடி மாற்றங்கள் விபரத்தையும் தெரிவிக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மறுத்து விட்டனர். விரைவில் சோனியா அதிரடி மாற்றங்களை நிகழ்த்த உள்ளார் என்பதை மட்டும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.



    Posted by விழியே பேசு... at 8:24 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ▼  August (482)
      • கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான அத்தனை வழ...
      • பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை: மன்மோகன் சிங் தி...
      • தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வெட்டிக்கொலை: கொலையாள...
      • இந்திரா காந்தியிடம் மன்னிப்பு கேட்ட நீல் ஆம்ஸ்டிராங்
      • சந்தானத்தால் கேன்சலான ஷங்கரின் 'ஐ' ஷூட்டிங்
      • பெங்களூர் டெஸ்ட்: டெய்லர் சதத்தால் வலுவான நிலையில்...
      • குஜராத் கலவர வழக்கில் அதிரடி தீர்ப்பு: முன்னாள் அம...
      • ராஜீவ் காந்தி கொலை வழக்கு: புயல் கிளப்ப தயாராகும் ...
      • உலக கோப்பையை வென்ற ஜுனியர் கேப்டன் உன்முக் சந்த் த...
      • இந்தியாவில் முதன்முறையாக இயக்குநர் சங்க இணையதளம்!
      • பாகிஸ்தான்- சீனாவுக்கு செக் வைக்கும் இந்தியா !
      • பாகன் படத்திற்காக குத்துப்பாட்டு எழுதிய பாரதியார் ...
      • சஹானாஸ் பேட்டி எதிரொலி சூப்பர் மார்க்கெட் உரிமையா...
      • திருட்டு டிவிடியில் முகமூடி படத்தை பாருங்கள் - மிஸ...
      • கல்யாண ராணி சஹானாஸ் பரபரப்பு பேட்டி ..!
      • திருச்சிக்கு வந்த சிங்கள மாணவர்கள்... நாம் தமிழர் ...
      • ஒரே கதையில் இரண்டு படங்கள்
      • மோடி பெயரை கேட்டாலே பயத்தில் அலறும் காங்கிரஸ்: பார...
      • பட முன்னோட்டம் : முகமூடி
      • பிரணாப் முகர்ஜியின் பேச்சை நம்பியே உண்ணாவிரதத்தை க...
      • ஒருநாள் போட்டியிலும் முதலிடம் பிடித்து தென்னாப்பிர...
      • ஜெயலலிதா முன்னிலையில் கலைஞரை புகழ்ந்து பேசி:அதிர வ...
      • அமெரிக்கா: 6 சீக்கியர்களை கொன்றவர் தற்கொலை செய்ததா...
      • ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒருத்தர் கூட பாஸாகாத புத...
      • கசாப் கருணை மனு தாக்கல் செய்தால் ...: சுசில் குமார...
      • ராஜ்யசபா எம்.பி.க்களுக்கு ரூ. 2 கோடியில் 4 படுக்கை...
      • ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் பிளவு ஏற்பட்டுள்ளது: க...
      • பத்திரிகையாளர்களிடம் அழகிரி டென்சன்
      • கிரானைட் குவாரி முறைகேடு: இடைக்கால அறிக்கை!
      • எம்.ஜி.ஆர்-யே மிஞ்சிவிட்டார் சமுத்திரக்கனி - இயக்க...
      • பட்டர்-ரொட்டி சாப்பிடும் பா.ஜ.. சோனியா கடும் தாக்கு
      • உடல் காயங்களை குணப்படுத்தும் ஸ்பிரே மருந்து
      • கசாபுக்கு பிரியாணி கொடுத்ததுபோதும், உடனே தூக்கிலிட...
      • இலங்கை ராணுவ அதிகாரிகள் திருப்பி அனுப்பப்படுவார்கள...
      • ஆளில்லா விமானங்கள் மூலம் கடல் பகுதியை கண்காணிக்கும...
      • இளவரசர் ஹாரிக்கு ‘நிர்வாண’ சல்யூட் :ஆடை அவிழ்க்கும...
      • பாஜக பிரதமர் வேட்பாளர்: நரேந்திர மோடிக்கு ஆதரவு 42...
      • கூடங்குளம் அணுமின் நிலைய வழக்கில் 31-ந் தேதி தீர்ப்பு
      • கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது?
      • சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்கள் மோதல்: முதல்வர்...
      • அமெரிக்காவில் 4 மாகாணங்களில் அவசர நிலை அறிவிப்பு
      • கமலுடன் மோதுகிறார் சூர்யா!
      • ராமஜெயம் கொலை வழக்கு : திடுக்கிடும் தகவல்
      • சீனா பக்கம் சாய்கிற இலங்கை உங்களுக்கு நட்பு நாடா?:...
      • இந்தியாவில் பிச்சைக்காரப் பெண்கள் கூட தங்க நகையுடன...
      • தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் எந்த நேரத்திலும் உயரலாம்
      • 4-வது திருமணத்துக்கு முயற்சி: நடிகர் திருமண மோசடி-...
      • ஆளுக்குப் 10 கேள்வி, பதில் சொல்லுங்க.. மன்மோகன், க...
      • பில்லா 2 டி.வி.யில் ஒளிபரப்ப தடை
      • கற்பழிப்பை ஆதரித்துப் பேசிய அமைச்சர் மீது செருப்பு...
      • 'நீர்க்குமிழி' படம் ரீமேக்: நாகேஷ் வேடத்தில் விவேக்
      • தெருவோரத்தில் காதல் ஜோடி உறவு... செல்போனில் டவுன்ல...
      • இரு வாரத்தில் சாதனை:சல்மான்கான் படம் ரூ.210 கோடி வ...
      • மதுரை ஆதீனத்திற்கு திடீர் சுகவீனம்.... கொடைக்கானலி...
      • செவ்வாய் கிரகத்தில் இருந்து கேட்ட மனித குரல்: கியூ...
      • சிங்கள ராணுவத்துக்கு இந்தியாவில் அளிப்போம்:இந்தியா
      • தற்கொலைக்கு முயலவில்லை:மாத்திரைகளை தின்றுவிட்டேன்-...
      • கலைஞர் வழியில் இணைய தளம் தொடங்குகிறார் நரேந்திரமோடி
      • நிர்வாண போட்டோ :ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறிய இள...
      • தென் அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்ச...
      • விதவைப் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் செ...
      • எனது மவுனம் ஆயிரம் பதில்களைவிட சிறந்தது: பிரதமர் ம...
      • பார்ட்டி, ஆட்டம் பாட்டம்: 2 பெண்கள் தலையை துண்டித்...
      • சூதாட்டம் மூலம் புழக்கத்தில் விட்ட கள்ள நோட்டு கும...
      • மாஜி அமைச்சர் பொன்னேரி சுந்தரம் வீடு அடித்து நொறுக...
      • தமிழர்கள் வசித்த பகுதியில் இலங்கை ராணுவ வீரர்களுக்...
      • நடிகை சுஜிபாலா திடீரென தற்கொலை முயற்சி
      • கிரானைட் முறைகேடு: மு.க.அழகிரி மகன் பிடிக்க தீவிரம்
      • வாரத்திற்கு 5 நாள்... 'டெய்லி' 7 மணி நேரம் முக்கல்...
      • ரஜினி ரசிகரான சசிகுமார்!
      • கூவத்தின் வரலாறு கூட தெரியாத குஷ்புவெல்லாம்.... ரா...
      • செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் திரைக்கு வர...
      • 'எல்லாவற்றையும்' முடித்து விட்டு 'எஸ்கேப்'... காதல...
      • மலேசியாவிலும் நித்தி.யால் சர்ச்சை
      • தானம் செய்த சிறுநீரகத்தை குப்பையில் வீசிய நர்சு
      • கார்த்தி பட ஷுட்டிங்கில் இருந்து அழுது கொண்டே ஓடிய...
      • ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு வருமா...
      • செந்தூரானை விடுதலை செய்யக் கோரி வைகோ, நாளை உண்ணாவி...
      • ஜுனியர் உலகக் கோப்பை: 3வது முறை வென்று இந்தியா சாதனை
      • அருந்ததி, நந்தகியுடன் ஏழு ஹீரோக்கள் அடிக்கும் 'கூத...
      • பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி தொடருமா?: ஈ....
      • மன்மோகன்,கத்காரி வீடுகளை முற்றுகையிட முயன்ற அன்னா ...
      • தமன்னாவுடன் ஹன்சிகா மோதல்
      • வருகிறது இன்னொரு மைனா
      • அசாமில் மீண்டும் வன்முறை: 5 பேர் குத்திக்கொலை- கலவ...
      • நிலவில் கால் பதித்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங் ...
      • ஸ்ரேயா 2 மாதம் களரி பயிற்சி
      • யுவனுடன் பணிபுரிவது பாக்கியம் :எம்.எஸ்.விஸ்வநாதன்
      • பென்ஷனுக்காக விதவைக் கோலம் பூண்ட பெண்கள்
      • விஜய், சூர்யா - அதுக்கு செட்டாக மாட்டாங்க! பார்த்த...
      • ஆசிரியர்களுக்கு மறு தகுதி தேர்வு!
      • அன்னா ஹசாரே குழுவில் நக்சலைட்டுகள்: சுப்பிரமணியசாம...
      • ஷங்கருக்கு ’நோ’ சொன்ன சந்தானம்!
      • இந்தியாவில் சிங்கள ராணுவத்துக்கு பயிற்சி அளிப்பதை ...
      • நாளை இறுதிப்போட்டி: ஜுனியர் உலககோப்பையை இந்தியா கை...
      • இலங்கையை குறி வைக்கும் இந்திய ஏவுகணைகள்?- இந்தியா ...
      • அண்ணா ஆர்ச் திங்கட்கிழமை இடிப்பு: துண்டு துண்டாக உ...
      • பொதுக்கூட்டத்தில் மம்தாவை நோக்கி பாய்ந்த விவசாயி ந...
      • விபச்சார விடுதி நடத்திய முன்னாள் மிஸ் ஸ்ரீலங்கா அழ...
      • ஆச்சிக்கு மூச்சுத் திணறல்: ஆஸ்பத்திரியில் அனுமதி
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.