விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Thursday, August 30, 2012

    ஜெயலலிதா முன்னிலையில் கலைஞரை புகழ்ந்து பேசி:அதிர வைத்த ரஜினி!


    வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்ட, காலத்தை வென்ற மனிதர்கள் ஒரு சிலர்தான். அப்படிப்பட்டவர்கள் மறைந்த காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் ஆகியோர். அந்த வரிசையில் என் ஆருயிர் நண்பர் கலைஞர் மற்றும் புரட்சித் தலைவி ஜெயலலிதா, எம்எஸ்வியும் இடம்பெற்றுள்ளனர், என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

    ஜெயா டிவியின் 14வது ஆண்டு விழாவில் மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன் - ராமமூர்த்தியை கவுரவித்தார் முதல்வர் ஜெயலலிதா.

    இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இசைஞானி இளையராஜா, உலகநாயகன் கமல்ஹாஸன், இயக்குநர் கே பாலச்சந்தர், தயாரிப்பாளர் ஏவி எம் சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.

    விழாவின் ஹைலைட்டாக அமைந்தது ரஜினியின் பேச்சு. அந்தப் பேச்சு முழுவதுமாக:

    "இந்த விழாவின் நாயகன் எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி சார் அவர்களே, இந்த விழாவுக்கு தலைமை தாங்க வந்திருக்கும் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு புரட்சித் தலைவி அவர்களே, கே.பி. சார் அவர்களே, சரவணன் சார் அவர்களே, இசைஞானி இளையராஜா அவர்களே, என்னுடைய அருமை நண்பர் கமல் ஹாசன் அவர்களே, (கீழே பார்த்து) விழாவுக்கு வந்திருக்கும் சோ சார் அவர்களே, சிவக்குமார் அவர்களே, திரையுலக பெரியவர்களே, அமைச்சர்களே, பத்திரிக்கை நண்பர்களே, என்னை வாழ வைக்கும், வாழ வைத்த தமிழக மக்களே அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கம்.

    சிஎம்மா பதவியேற்ற பிறகு அவருக்கு திரையுலகின் சார்பில் பாராட்டு விழா நடத்தணும்னு சொல்லி நிறையபேர் விரும்பினாங்க. ஆனா முதல்வர் இப்போதைக்கு வேணாம்னு சொன்னதா கேள்விப்பட்டேன்.

    இப்போ, அவங்களே வந்து இங்கே, எம்எஸ்விக்காக பெரிய பாராட்டு விழா நடத்துறாங்கன்னு சொன்னா.. அது ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிச்ச மாதிரிதான். இது திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும் கூட பெரிய வாய்ப்பு. பெரிய விஷயம். உங்களை பாராட்ட இப்போ எங்களுக்கும் சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு.

    ஜெயா டிவி 13 ஆண்டுகள் முடிந்து 14வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அந்த சாதனைக்காக அங்கே பணியாற்றும் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிச்சிக்கிறேன்.

    எனக்கும் ஜெயா டிவி பிடிக்கும். பல நல்ல நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்ப்பேன். காலையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எனக்கும் பிடிக்கும். அதேபோல, செய்திகளுக்கு முன்னாடி வரும் வரலாற்றுச் சுவடுகள் மிகவும் அருமையாக இருக்கும்.

    அப்புறம் சோவின் எங்கே பிராமணன், தொடரை நான் விரும்பிப் பார்ப்பேன். சோ கொடுக்கிற விளக்கங்கள் நல்லா இருந்தது. ஆனா அதுக்கப்புறம் நின்னுடுச்சி. நான்கூட சோ கிட்ட, ஏன் நிறுத்திட்டீங்கன்னு கேட்டேன். அதுக்கு அவர் சொன்னார், 'சிஎம் கூட என்கிட்ட கேட்டாங்க்.. ஆனா எனக்குத்தான் நேரமில்லே'ன்னார். இந்த தமிழ்நாட்ல, சிஎம் சொல்லியும் கேட்காத ஒரு ஆள் இருக்கார்னா அது சோ சார்தான்...

    ஒரு சின்ன செடியா இருந்த ஜெயா டி.வி. இன்னைக்கு கமல் சொன்ன மாதிரி ஒரு மரமா வந்திருக்கு தன்னோட சொந்த முயற்சியால.

    இது எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி அவர்களுக்கு பாராட்டு விழா. இங்கே உள்ள எல்லாரை விடவும் நான்தான் ஜூனியர்னு நினைக்கிறேன் சினிமாவில். எம்எஸ்வி அவர்களைப் பாராட்ட இளையராஜா சார், கமல் போன்றவர்களே வார்த்தையில்லாமல் தயங்கும்போது, நான் மட்டும் என்ன சொல்லிடப் போறேன்.

    அவருடன் நான் நிறைய படங்கள் கூட செய்யவில்லை. ஆனால் நான் பெங்களூரில் இருக்கும்போது, தமிழே தெரியாத கன்னடாக்காரங்க கூட, அர்த்தம் தெரியாமலே பாடும் பாட்டு போனால் போகட்டும் போடா... நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்...

    எனக்கு அப்போ மொழி தெரியலேன்னாலும் தமிழ்ப் படங்களுக்கு அதிகமா போவேன். அப்படி ஒருமுறை சர்வர் சுந்தரம் படத்துக்குப் போனேன். ஒரு சாதாரண சர்வர் சினிமா நடிகனாக எப்படி ஆகிறான் என்பது கதை. நானும் கண்டக்டரா இருந்து, சினிமா நடிகனாகணும்னு நினைச்சிக்கிட்டிருந்த காலம் அது.

    அந்தப் படத்துல ஒரு பாட்டு, 'அவளுக்கென்ன அழகிய மனம்..'. அதுல ஒரு சீன்ல மட்டும் எல்லோரும் கைத் தட்டறாங்க. எம்.ஜி.ஆர். ஒரு சிவாஜி இவங்களோட படங்கள்ல அறிமுகக்காட்சிக்கு எப்படி கைத்தட்டல், விசில் கிடைக்குமோ.. அப்படி ஒரு ரெஸ்பான்ஸ். எனக்கு புரியவேயில்லை. எதுக்கு எல்லாரும் இதுக்கு இப்படி கைத்தட்டுறீங்கன்னு பக்கத்துல இருந்தவரைக் கேட்டேன்.

    'அங்க கோட் போட்டுக்கிட்டு மியூசிக் கம்போஸ் பண்ற மாதிரி ஒருத்தரைக் காட்டறாங்களே... அவர்தான் இந்தப் படத்தோட மியூசிக் டைரக்டர் எம்எஸ் விஸ்வநாதன். அவருக்காகத்தான் இந்தக் கைத்தட்டல்,' என்றார்.

    ஒரு இசையமைப்பாளருக்கு இவ்வளவு வரவேற்பா.. ரசிகர்களா... இத்தனை மதிப்பான்னு ஆச்சர்யமா இருந்தது.

    நான் இங்கே வந்த பிறகு, அபூர்வ ராகங்கள் சமயத்துலதான் நேர்ல பார்த்தேன். நான் சினிமாவுல பார்த்ததுக்கும் நேர்ல பார்க்குறதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லே. நான் பார்க்கும்போது... என்ன அவர் காவி உடை போடல... மத்தபடி நெத்தியில நீறு, குங்குமம் வெச்சிக்கிட்டு சாதாரணமா இருந்தார்.

    மூன்று முடிச்சு படத்துல நான் பாடற மாதிரி ஒரு பாட்டு, அந்த போட் ஸாங். 'மண வினைகள் யாருடனோ..' எனக்கு தனித்துவமான முகம்.. அதுக்கேத்தமாதிரி Peculier வாய்ஸ் வேணும்னு கேட்டபோது, எம்.எஸ்.வி.சார்தான் எனக்காக குரல் கொடுத்தார்.

    சினிமாவில் எனக்கு முதன் முதலா பாடினது எம்.எஸ்.வி சார்தான். அதுக்கப்புறம் நினைத்தாலே இனிக்கும் படத்துல 'சம்போ சிவ சம்போ...' பாட்டு பத்தி நீங்க கேள்விப்பட்டிருப்பீங்க.

    எம்.எஸ்.வி. - ராமமூர்த்தி மாதிரி சாதனையாளர்களைப் பத்தி பேசும்போது, எனக்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது.

    இந்த மரணம் என்பது இயற்கையானது. எல்லாருக்கும் வரக் கூடியது. இந்த மரணம் ஒரு தடவைதான் என்றில்லை... ரெண்டு முறை நிகழும். நிறைய பேருக்கு அதாவது தொன்னூறு சதவீத மக்களுக்கு மரணம் ஒரு தடவைதான். அதாவது உயிர் உடலைவிட்டு போனா முடிஞ்சது... பினிஷ்.. அவ்வளவுதான்.

    இன்னொரு வகை... மிகப் பெரிய பேரும் புகழும் பெற்றவர்கள். அந்த பேரையும் புகழையும் தோல்வியாலேயோ இல்லே வேற சில காரணங்களாலேயோ இழந்துட்டா, அப்போ அவங்களுக்கு முதல் மரணம் வருது. அதற்கடுத்து இயற்கையாக உயிர் பிரியும்போது ரெண்டாவது முறையாக மரணம் நிகழும்.

    ஆனா மரணமே இல்லாத சில பேர் இருக்காங்க. அவங்க ஒரு பர்சன்ட்தான். அவங்க வாழும்போதும் சரி, இறந்து போன பிறகும் சரி, அவங்க பேரும் புகழும் எப்பவுமே நிலைச்சிருக்கும். அவங்கள்லாம் சாகாவரம் பெற்றவர்கள். தனிப்பிறவி.

    என் ஆருயிர் நண்பர் டாக்டர் கலைஞர்...

    வடக்கில் பார்த்தீங்கன்னா... சினிமாவில வி.சாந்தாராம், தாதா சாகேப் பால்கே, எஸ்.டி.பரமன், நம்ம தமிழ்நாட்டுல பெருந்தலைவர் காமராஜர், பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., சிவாஜி சார், கண்ணதாசன்... இவங்க எல்லாரும் மறைந்தாலும் அவர்கள் பெயரும் புகழும் மறையவில்லை. இன்னும் அவர்கள் நம்மோடு வாழ்ந்துக்கிட்டிருக்காங்க.

    இன்று அரசியலில் என்னுடைய ஆருயிர் நண்பர் மதிப்பிற்குரிய டாக்டர் கலைஞர் அவர்கள், புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்கள், விஸ்வநாதன் ராமமூர்த்தி... இவங்களுக்கெல்லாம் வெற்றி தோல்வி போன்றவை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

    இவங்களைப் பொறுத்தவரை வெற்றியடைஞ்சா சந்தோஷம் இருக்கும். தோல்வியடைஞ்சா மனசு கொஞ்சம் வருத்தப்படும். ஆனா அவங்க பேருக்கும் புகழுக்கும் எந்த பாதிப்பும் வராது.

    ஏன்னா... அதையெல்லாம் தாண்டிய நிலையில் இருப்பவர்கள் இவர்கள். வெற்றி, தோல்விகளை தாங்கிக்கொள்ளும் சமமான மனநிலையில இருப்பாங்க.

    அவங்க வாழ்ந்த காலத்துல நானும் வாழ்ந்திருக்கேன். அவங்க கூட பழகியிருக்கேங்கிற சந்தோஷத்தோட,இந்த விழாவுல எனக்கு பேச வாய்ப்பளித்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொண்டு, முதல்வர் புரட்சித் தலைவி அவர்கள் இன்னும் மக்களுக்கு நிறைய சேவை செய்து, இந்தியா மட்டுமில்லே உலக அளவில் அவர் பேரும் புகழும் பெறவேண்டும், அதற்கு தேவையான நல்ல ஆரோக்கியத்தையும் மனநிம்மதியையும் இறைவன் அவருக்கு வழங்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு வணங்கி விடைபெறுகிறேன்."

    -இவ்வாறு பேசினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.


    Posted by விழியே பேசு... at 10:41 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: சினிமா

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ▼  August (482)
      • கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான அத்தனை வழ...
      • பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை: மன்மோகன் சிங் தி...
      • தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வெட்டிக்கொலை: கொலையாள...
      • இந்திரா காந்தியிடம் மன்னிப்பு கேட்ட நீல் ஆம்ஸ்டிராங்
      • சந்தானத்தால் கேன்சலான ஷங்கரின் 'ஐ' ஷூட்டிங்
      • பெங்களூர் டெஸ்ட்: டெய்லர் சதத்தால் வலுவான நிலையில்...
      • குஜராத் கலவர வழக்கில் அதிரடி தீர்ப்பு: முன்னாள் அம...
      • ராஜீவ் காந்தி கொலை வழக்கு: புயல் கிளப்ப தயாராகும் ...
      • உலக கோப்பையை வென்ற ஜுனியர் கேப்டன் உன்முக் சந்த் த...
      • இந்தியாவில் முதன்முறையாக இயக்குநர் சங்க இணையதளம்!
      • பாகிஸ்தான்- சீனாவுக்கு செக் வைக்கும் இந்தியா !
      • பாகன் படத்திற்காக குத்துப்பாட்டு எழுதிய பாரதியார் ...
      • சஹானாஸ் பேட்டி எதிரொலி சூப்பர் மார்க்கெட் உரிமையா...
      • திருட்டு டிவிடியில் முகமூடி படத்தை பாருங்கள் - மிஸ...
      • கல்யாண ராணி சஹானாஸ் பரபரப்பு பேட்டி ..!
      • திருச்சிக்கு வந்த சிங்கள மாணவர்கள்... நாம் தமிழர் ...
      • ஒரே கதையில் இரண்டு படங்கள்
      • மோடி பெயரை கேட்டாலே பயத்தில் அலறும் காங்கிரஸ்: பார...
      • பட முன்னோட்டம் : முகமூடி
      • பிரணாப் முகர்ஜியின் பேச்சை நம்பியே உண்ணாவிரதத்தை க...
      • ஒருநாள் போட்டியிலும் முதலிடம் பிடித்து தென்னாப்பிர...
      • ஜெயலலிதா முன்னிலையில் கலைஞரை புகழ்ந்து பேசி:அதிர வ...
      • அமெரிக்கா: 6 சீக்கியர்களை கொன்றவர் தற்கொலை செய்ததா...
      • ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒருத்தர் கூட பாஸாகாத புத...
      • கசாப் கருணை மனு தாக்கல் செய்தால் ...: சுசில் குமார...
      • ராஜ்யசபா எம்.பி.க்களுக்கு ரூ. 2 கோடியில் 4 படுக்கை...
      • ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் பிளவு ஏற்பட்டுள்ளது: க...
      • பத்திரிகையாளர்களிடம் அழகிரி டென்சன்
      • கிரானைட் குவாரி முறைகேடு: இடைக்கால அறிக்கை!
      • எம்.ஜி.ஆர்-யே மிஞ்சிவிட்டார் சமுத்திரக்கனி - இயக்க...
      • பட்டர்-ரொட்டி சாப்பிடும் பா.ஜ.. சோனியா கடும் தாக்கு
      • உடல் காயங்களை குணப்படுத்தும் ஸ்பிரே மருந்து
      • கசாபுக்கு பிரியாணி கொடுத்ததுபோதும், உடனே தூக்கிலிட...
      • இலங்கை ராணுவ அதிகாரிகள் திருப்பி அனுப்பப்படுவார்கள...
      • ஆளில்லா விமானங்கள் மூலம் கடல் பகுதியை கண்காணிக்கும...
      • இளவரசர் ஹாரிக்கு ‘நிர்வாண’ சல்யூட் :ஆடை அவிழ்க்கும...
      • பாஜக பிரதமர் வேட்பாளர்: நரேந்திர மோடிக்கு ஆதரவு 42...
      • கூடங்குளம் அணுமின் நிலைய வழக்கில் 31-ந் தேதி தீர்ப்பு
      • கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது?
      • சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்கள் மோதல்: முதல்வர்...
      • அமெரிக்காவில் 4 மாகாணங்களில் அவசர நிலை அறிவிப்பு
      • கமலுடன் மோதுகிறார் சூர்யா!
      • ராமஜெயம் கொலை வழக்கு : திடுக்கிடும் தகவல்
      • சீனா பக்கம் சாய்கிற இலங்கை உங்களுக்கு நட்பு நாடா?:...
      • இந்தியாவில் பிச்சைக்காரப் பெண்கள் கூட தங்க நகையுடன...
      • தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் எந்த நேரத்திலும் உயரலாம்
      • 4-வது திருமணத்துக்கு முயற்சி: நடிகர் திருமண மோசடி-...
      • ஆளுக்குப் 10 கேள்வி, பதில் சொல்லுங்க.. மன்மோகன், க...
      • பில்லா 2 டி.வி.யில் ஒளிபரப்ப தடை
      • கற்பழிப்பை ஆதரித்துப் பேசிய அமைச்சர் மீது செருப்பு...
      • 'நீர்க்குமிழி' படம் ரீமேக்: நாகேஷ் வேடத்தில் விவேக்
      • தெருவோரத்தில் காதல் ஜோடி உறவு... செல்போனில் டவுன்ல...
      • இரு வாரத்தில் சாதனை:சல்மான்கான் படம் ரூ.210 கோடி வ...
      • மதுரை ஆதீனத்திற்கு திடீர் சுகவீனம்.... கொடைக்கானலி...
      • செவ்வாய் கிரகத்தில் இருந்து கேட்ட மனித குரல்: கியூ...
      • சிங்கள ராணுவத்துக்கு இந்தியாவில் அளிப்போம்:இந்தியா
      • தற்கொலைக்கு முயலவில்லை:மாத்திரைகளை தின்றுவிட்டேன்-...
      • கலைஞர் வழியில் இணைய தளம் தொடங்குகிறார் நரேந்திரமோடி
      • நிர்வாண போட்டோ :ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறிய இள...
      • தென் அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்ச...
      • விதவைப் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் செ...
      • எனது மவுனம் ஆயிரம் பதில்களைவிட சிறந்தது: பிரதமர் ம...
      • பார்ட்டி, ஆட்டம் பாட்டம்: 2 பெண்கள் தலையை துண்டித்...
      • சூதாட்டம் மூலம் புழக்கத்தில் விட்ட கள்ள நோட்டு கும...
      • மாஜி அமைச்சர் பொன்னேரி சுந்தரம் வீடு அடித்து நொறுக...
      • தமிழர்கள் வசித்த பகுதியில் இலங்கை ராணுவ வீரர்களுக்...
      • நடிகை சுஜிபாலா திடீரென தற்கொலை முயற்சி
      • கிரானைட் முறைகேடு: மு.க.அழகிரி மகன் பிடிக்க தீவிரம்
      • வாரத்திற்கு 5 நாள்... 'டெய்லி' 7 மணி நேரம் முக்கல்...
      • ரஜினி ரசிகரான சசிகுமார்!
      • கூவத்தின் வரலாறு கூட தெரியாத குஷ்புவெல்லாம்.... ரா...
      • செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் திரைக்கு வர...
      • 'எல்லாவற்றையும்' முடித்து விட்டு 'எஸ்கேப்'... காதல...
      • மலேசியாவிலும் நித்தி.யால் சர்ச்சை
      • தானம் செய்த சிறுநீரகத்தை குப்பையில் வீசிய நர்சு
      • கார்த்தி பட ஷுட்டிங்கில் இருந்து அழுது கொண்டே ஓடிய...
      • ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு வருமா...
      • செந்தூரானை விடுதலை செய்யக் கோரி வைகோ, நாளை உண்ணாவி...
      • ஜுனியர் உலகக் கோப்பை: 3வது முறை வென்று இந்தியா சாதனை
      • அருந்ததி, நந்தகியுடன் ஏழு ஹீரோக்கள் அடிக்கும் 'கூத...
      • பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி தொடருமா?: ஈ....
      • மன்மோகன்,கத்காரி வீடுகளை முற்றுகையிட முயன்ற அன்னா ...
      • தமன்னாவுடன் ஹன்சிகா மோதல்
      • வருகிறது இன்னொரு மைனா
      • அசாமில் மீண்டும் வன்முறை: 5 பேர் குத்திக்கொலை- கலவ...
      • நிலவில் கால் பதித்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங் ...
      • ஸ்ரேயா 2 மாதம் களரி பயிற்சி
      • யுவனுடன் பணிபுரிவது பாக்கியம் :எம்.எஸ்.விஸ்வநாதன்
      • பென்ஷனுக்காக விதவைக் கோலம் பூண்ட பெண்கள்
      • விஜய், சூர்யா - அதுக்கு செட்டாக மாட்டாங்க! பார்த்த...
      • ஆசிரியர்களுக்கு மறு தகுதி தேர்வு!
      • அன்னா ஹசாரே குழுவில் நக்சலைட்டுகள்: சுப்பிரமணியசாம...
      • ஷங்கருக்கு ’நோ’ சொன்ன சந்தானம்!
      • இந்தியாவில் சிங்கள ராணுவத்துக்கு பயிற்சி அளிப்பதை ...
      • நாளை இறுதிப்போட்டி: ஜுனியர் உலககோப்பையை இந்தியா கை...
      • இலங்கையை குறி வைக்கும் இந்திய ஏவுகணைகள்?- இந்தியா ...
      • அண்ணா ஆர்ச் திங்கட்கிழமை இடிப்பு: துண்டு துண்டாக உ...
      • பொதுக்கூட்டத்தில் மம்தாவை நோக்கி பாய்ந்த விவசாயி ந...
      • விபச்சார விடுதி நடத்திய முன்னாள் மிஸ் ஸ்ரீலங்கா அழ...
      • ஆச்சிக்கு மூச்சுத் திணறல்: ஆஸ்பத்திரியில் அனுமதி
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.