விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Wednesday, August 1, 2012

    உலகின் மிகப் பெரிய மின்தடை ...பிரதமர் வீட்டுக்கு பூட்டானில் இருந்து மின்சாரம்



    இந்தியாவில் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நேற்று ஏற்பட்ட மின்தடை, உலகின் மிகப் பெரியதாக கருதப்படுகிறது. ரயில்கள் இயங்காததாலும், போக்குவரத்து முடங்கியதாலும் மொத்தம் 70 கோடி பேர் ஒரே நேரத்தில் மின் தடையால் அவதிப்பட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவம் இதுவரை உலகில் வேறு எங்கும் நடந்ததில்லை. மின்தடை முற்றிலும் சீராக ஒரு நாள் வரை ஆகும் என மத்திய மின் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல் நீர் மின் நிலையங்கள் இயக்கப்பட்டு, மின் தொகுப்பில் மின்சாரம் பெறப்படும்.

    அடுத்த அனல் மின் நிலையங்களில் இருந்து மின்தொகுப்புக்கு மின்சாரம் பெறப்படும். இந்த பணிகள் முடிய ஒரு நாள் ஆகும். மின்தடையால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் விவரம்: வடக்கு மண்டலம்: பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், டெல்லி, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மற்றும் சண்டிகர்.
    கிழக்கு மண்டலம்: மேற்கு வங்கம், சட்டீஸ்கர், பீகார், ஜார்கண்ட், ஒடிசா மற்றும் சிக்கிம். வடகிழக்கு மண்டலம்: அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், திரிபுரா.

    மெட்ரோ ரயில் சேவை முடங்கியது

    டெல்லி, கொல்கத்தாவில் மெட்ரோ ரயில் சேவை 2 மணி நேரம் முடங்கியது. வடக்கு, கிழக்கு, வடகிழக்கு மின் தொகுப்புகள் நேற்று மதியம் 1 மணி அளவில் திடீரென முடங்கின. இதனால், டெல்லி, கொல்கத்தாவில் மின்சார தடை ஏற்பட்டது. இதன்காரணமாக மெட்ரோ ரயில் சேவை அடியோடு பாதிக்கப்பட்டது. ரயில்கள் ஆங்காங்கே பாதியில் நின்றன. சுரங்கப்பாதைகளில் ரயில் நின்றதால் பயணிகள் அச்சத்தில் உறைந்தனர். எமர்ஜென்சி மின்சார சப்ளையை பயன்படுத்தி. பாதி வழியில் நின்ற ரயில்கள் அருகில் உள்ள ரயில் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. 2 மணி நேரத்துக்கு பிறகே மெட்ரோ ரயில் மின் சப்ளை சீரானது.

    நடுவழியில் நின்ற 300 ரயில்கள்

    ஒரே நேரத்தில் 3 மின்தொகுப்புகள் முடங்கியதால் வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் மின்சாரம் அடியோடு தடைபட்டது. இந்த மின்சார தடை காரணமாக வடக்கு ரயில்வே, வடக்கு மத்திய ரயில்வே, மேற்கு மத்திய ரயில்வே, கிழக்கு மத்திய ரயில்வே, கிழக்கு ரயில்வே மற்றும் தென் கிழக்கு ரயில்வே கடுமையாக பாதிக்கப்பட்டது. மின்சாரம் திடீரென துண்டிக்கப்பட்டதால் ரயில்கள் நடுவழியில் நின்றுவிட்டன.

    ராஜதானி, சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட ரயில்கள் நடுவழியில் நின்றுவிட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன. பல நகரங்களில் புறநகர் மின்சார ரயில் சேவை அடியோடு பாதிக்கப்பட்டன. அதில் பயணம் செய்த பயணிகள் கடுமையான பாதிப்புக்கு ஆளானார்கள். நீண்ட தூர ரயில்களில் பயணம் செய்தவர்கள் உணவு, குடிநீரின்றி அவதிப்பட்டனர்.

    சுரங்கங்களில் தொழிலாளர்கள் தவிப்பு

    திடீர் மின்தடை காரணமாக மேற்கு வங்காளத்தில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் நிருபர்களிடம் கூறுகையில், ''பர்த்வான் மாவட்டத்தில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். சுரங்கத்தில் இருக்கும் அவர்கள் அங்கிருந்து மேலே வருவதற்கு லிப்ட்கள் பயன்படுகின்றன. மின்சாரம் இல்லாததால் லிப்ட்கள் இயங்கவில்லை. இதனால், நூற்றுக்கணக்கான சுரங்க தொழிலாளர்கள் சிக்கி தவிக்கின்றனர். மின்சப்ளையை சீராக்கி அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

    மின்தொகுப்பு முடங்கியுள்ள நிலையில், தேசிய அனல் மின் கழக(என்.டி.பி.சி) தலைவர், நிலக்கரி சப்ளை செய்யும் கோல் இந்தியா நிறுவனத்தின்(சி.ஐ.எல்) மீது குற்றம் சுமத்தியுள்ளார். கோல் இந்தியா நிறுவனம் போதிய நிலக்கரியை சப்ளை செய்யாததால், என்.டி.பி.சியின் மின் உற்பத்தி திட்டங்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது என கூறும் அதன் தலைவர் அருப் ராய் சவுத்திரி, ‘‘உலகிலேயே உற்பத்தி குறைந்த நிலையில் அதிக லாபம் ஈட்டிய ஒரே நிறுவனம் கோல் இந்தியா தான்’’ என விமர்சித்துள்ளார்.

    சிக்னல்கள் இயங்காததால் போக்குவரத்து நெரிசல்

    திடீர் மின் தடை காரணமாக டெல்லியில் போக்குவரத்து சிக்னல்கள் இயங்கவில்லை. இதனால், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் சிரமப்பட்டனர். 400க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் களமிறக்கப்பட்டனர். ஆனாலும், நகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதே நேரத்தில் 3 மின்தொகுப்புகள் முடங்கிய தகவல் கிடைத்ததும், பெரும்பாலான அலுவலகங்களில் உள்ள உயர் அதிகாரிகள் தங்கள் ஊழியர்கள் உடனடியாக வீட்டுக்கு புறப்பட அனுமதி கொடுத்தனர்.

    ஜெனரேட்டர் உதவியுடன் இயங்கிய அலுவலகங்களில் வேலை செய்தவர்கள் கூட மின்சாரம் வருவதற்கு பல மணி நேரம் ஆகும் என்பதால் வீட்டுக்கு புறப்பட்டனர். ஒரே நேரத்தில் பலரும் வீட்டுக்கு புறப்பட்டதால், போக்குவரத்து நெரிசல் மேலும் சிக்கலானது. இதனால், மதியம் வீட்டுக்கு புறப்பட்ட பலர் வீடுபோய் சேர இரவு ஆகிவிட்டது.

    டெல்லி ஏர்போர்ட்டில் பாதிப்பு இல்லை

    டெல்லியில் நேற்று ஏற்பட்ட மின்தடை காரணமாக இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. டீசல் என்ஜின் ஜெனரேட்டர் மூலம் விமானநிலையம் வழக்கம் போல் இயங்கியது. வடக்கு மண்டல மின்தொகுப்பு நேற்று இரண்டாவது நாளாக முடங்கியதால் தலைநகர் டெல்லி முழுவதும் மின்தடை ஏற்பட்டது. விமான நிலையத்தில் டீசல் என்ஜின் ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்பட்டன. இதனால் மின்தடை ஏற்பட்ட ஒரு நிமிடத்தில் மின்சப்ளை கொடுக்கப்பட்டது. இதனால் விமான நிலையத்தின் அனைத்து பணிகளும் வழக்கம்போல் நடந்தன. எந்த விமானமும் தாமதமாகவில்லை, ரத்து செய்யப்படவும் இல்லை.

    மின் தொகுப்பு முடங்க காரணம் என்ன?

    தொடர்ந்து 2 நாட்கள் மின் தடை ஏற்பட்டதற்கு, மாநிலங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மின்சாரத்தை விட கூடுதலாக பயன்படுத்தியதுதான் முக்கிய காரணம். குறிப்பாக, வடக்கு மின் தொகுப்பில் உள்ள உ.பி,  அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்கள் அதிகளவில் மின்சாரம் எடுத்ததால் இந்த மின் தொகுப்பு முடங்கியது. உ.பி. தனக்கு ஒதுக்கப்பட்டதை விட கூடுதலாக 2.60 கோடி யூனிட்களை பயன்படுத்தி உள்ளது. அரியானா 1.3 கோடி யூனிட்டும், பஞ்சாப் 52 லட்சம் யூனிட்டும் கூடுதலாக எடுத்துள்ளன.

    இது தொடர்பாக இம்மாநில மின் வாரிய அதிகாரிகளை மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பல முறை எச்சரித்தும் இந்த தவறு தொடர்கிறது. இந்த மாநிலங்கள் அதிக மின்சாரத்தை பயன்படுத்துவதற்கு முக்கிய காரணம் பருவமழை பொய்த்ததுதான். இதனால், நீர்மின் உற்பத்தி குறைந்ததோடு, பாசனத்துக்கு பம்பு செட்டுகளை விவசாயிகள் பயன்படுத்துவதால் மின் தேவை அதிகரித்துள்ளது. தவிர, வட மாநிலங்களில் இப்போதும் வெயில் கொளுத்துகிறது. இதனால், வீடுகளில் ஏசி, ஃபேன்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதால் மின் தேவை அதிகமாகி உள்ளது.

    மேற்கு வங்கத்தில் விடுமுறை

    மின்தொகுப்பு முடக்கத்தால் ஏற்படும் மின்தடை சீராக 10 முதல் 12 மணி நேரம் ஆகலாம். சாலைகளில் சிக்னல் விளக்குகள் எரியாததால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படும்.
    இதை கருத்தில் கொண்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களை நேற்று மதியம் 3 மணிக்கு மூட உத்தரவு பிறப்பித்தார்.

    அதிகாரிகளின் அவசர கூட்டத்தை கூட்டிய மம்தா பானர்ஜி, முதலில் ரயில் போக்குவரத்தை முதலில் சீராக்க நடவடிக்கை எடுக்கும்படி கூறினார். புறநகர் ரயில்களை டீசல் என்ஜின்கள் மூலம் இயக்க உத்தரவிட்டார். இதனால் கொல்கத்தாவில் ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படவில்லை.

    மக்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு செல்ல பஸ், லாரிகள் ஏற்பாடு செய்யவும் உத்தரவிட்டார். மின்தடை பிரச்னையை பெரிதுபடுத்தி செய்தி வெளியிட்டு மக்களிடையை பீதியை ஏற்படுத்த வேண்டாம் என டி.வி.செய்தி சேனல் நிறுவனங்களுக்கு மம்தா வேண்டுகோள் விடுத்தார்.


    பிரதமர் வீட்டுக்கு பூட்டானில் இருந்து மின்சாரம்

    டெல்லிக்கு மின்சாரம் வழங்கும் மின்தொகுப்பு முடங்கியதும் மெட்ரோ ரயில், மத்திய டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி மாளிகை மற்றும் விவிஐபிகளின் வீடுகளில் மின் தடை ஏற்பட்டது. இதை சமாளிக்க பூட்டானில் இருந்து நீர் மின்னுற்பத்தி திட்டம் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை அவசரமாக பெற்றனர். ஏறக்குறைய 2 மணி நேர மின்தடைக்குப் பிறகு பிரதமர் இல்லத்தில் மீண்டும் மின்சாரம் வந்தது.
                                             
    எதனால் ஏற்படுகிறது? மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மின் தொகுப்பு மண்டலங்கள் மூலம் விநியோகம் செய்யப்படுகிது. இதை பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனம் நிர்வாகம் செய்கிறது. மாநில மின் வாரியங்கள் இதில் இருந்து தங்களுக்குத் தேவையான மின்சாரத்தை பெற்றுக் கொள்ளும்.

    மின் தொகுப்பில் மாநிலங்கள் இவ்வளவு மின்சாரம்தான் எடுக்க வேண்டும் என முன்கூட்டியே திட்டமிடப்பட்டு விடும். அதை அந்தந்த மாநிலங்கள் பின்பற்ற வேண்டும். அப்படி இல்லாமல் அதிகமாக மின்சாரத்தை உறிஞ்ச முற்படும்போதுதான் மின்தொகுப்பு முடங்கிபோய் விடுகிறது. அதன்பிறகு யாருக்குமே மின்சாரம் கிடைக்காது.

    2001ல் ஏற்பட்ட தடை: இந்தியாவில் இதற்கு முன் கடந்த 2001ம் ஆண்டில்தான் இதுபோன்று மின்தொகுப்புகள் முடங்கி பெரிய அளவில் மின்தடை ஏற்பட்டது. அப்போது உ.பி.யில் உள்ள மின் நிலையம் பழுதானதால் வடக்கு மண்டல மின்தொகுப்பு முடங்கியது. இதனால் ஏற்பட்ட மின் தடை நீங்க 24 மணி நேரம் ஆனது. ஆனால் திங்கட் கிழமை ஏற்பட்ட மின்தடை 6 மணி நேரத்தில் சரியானது.

    மும்பைக்கு பாதிப்பு வராது: இந்தியா முழுவதும் மின் தடை ஏற்பட்டாலும் மும்பையில் பாதிப்பு இருக்காது. குறிப்பாக தெற்கு மும்பையில். அங்குதான் பங்குச் சந்தை, சர்வதேச விமான நிலையம், உயர் நீதிமன்றம், கவர்னர், அமைச்சர்கள் என விஐபிகளின் வீடுகள் இருக்கின்றன.

    மேற்கு மின் தொகுப்பில் மும்பை இணைந்துள்ளது. அதில் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அதிலிருந்து விலகி, வேறு மின் சப்ளை மூலம் மும்பை இயங்கத் தொடங்கும். அதற்கேற்ப அங்கு வசதி செய்யப்பட்டுள்ளது. டாடா பவர் நிறுவனம் இந்த வசதியை அளித்துள்ளது. இதேபோல் டெல்லியிலும் வசதி ஏற்படுத்த வேண்டும் என டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் கோரியுள்ளார்.


    Posted by விழியே பேசு... at 6:13 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ▼  August (482)
      • கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான அத்தனை வழ...
      • பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை: மன்மோகன் சிங் தி...
      • தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வெட்டிக்கொலை: கொலையாள...
      • இந்திரா காந்தியிடம் மன்னிப்பு கேட்ட நீல் ஆம்ஸ்டிராங்
      • சந்தானத்தால் கேன்சலான ஷங்கரின் 'ஐ' ஷூட்டிங்
      • பெங்களூர் டெஸ்ட்: டெய்லர் சதத்தால் வலுவான நிலையில்...
      • குஜராத் கலவர வழக்கில் அதிரடி தீர்ப்பு: முன்னாள் அம...
      • ராஜீவ் காந்தி கொலை வழக்கு: புயல் கிளப்ப தயாராகும் ...
      • உலக கோப்பையை வென்ற ஜுனியர் கேப்டன் உன்முக் சந்த் த...
      • இந்தியாவில் முதன்முறையாக இயக்குநர் சங்க இணையதளம்!
      • பாகிஸ்தான்- சீனாவுக்கு செக் வைக்கும் இந்தியா !
      • பாகன் படத்திற்காக குத்துப்பாட்டு எழுதிய பாரதியார் ...
      • சஹானாஸ் பேட்டி எதிரொலி சூப்பர் மார்க்கெட் உரிமையா...
      • திருட்டு டிவிடியில் முகமூடி படத்தை பாருங்கள் - மிஸ...
      • கல்யாண ராணி சஹானாஸ் பரபரப்பு பேட்டி ..!
      • திருச்சிக்கு வந்த சிங்கள மாணவர்கள்... நாம் தமிழர் ...
      • ஒரே கதையில் இரண்டு படங்கள்
      • மோடி பெயரை கேட்டாலே பயத்தில் அலறும் காங்கிரஸ்: பார...
      • பட முன்னோட்டம் : முகமூடி
      • பிரணாப் முகர்ஜியின் பேச்சை நம்பியே உண்ணாவிரதத்தை க...
      • ஒருநாள் போட்டியிலும் முதலிடம் பிடித்து தென்னாப்பிர...
      • ஜெயலலிதா முன்னிலையில் கலைஞரை புகழ்ந்து பேசி:அதிர வ...
      • அமெரிக்கா: 6 சீக்கியர்களை கொன்றவர் தற்கொலை செய்ததா...
      • ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒருத்தர் கூட பாஸாகாத புத...
      • கசாப் கருணை மனு தாக்கல் செய்தால் ...: சுசில் குமார...
      • ராஜ்யசபா எம்.பி.க்களுக்கு ரூ. 2 கோடியில் 4 படுக்கை...
      • ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் பிளவு ஏற்பட்டுள்ளது: க...
      • பத்திரிகையாளர்களிடம் அழகிரி டென்சன்
      • கிரானைட் குவாரி முறைகேடு: இடைக்கால அறிக்கை!
      • எம்.ஜி.ஆர்-யே மிஞ்சிவிட்டார் சமுத்திரக்கனி - இயக்க...
      • பட்டர்-ரொட்டி சாப்பிடும் பா.ஜ.. சோனியா கடும் தாக்கு
      • உடல் காயங்களை குணப்படுத்தும் ஸ்பிரே மருந்து
      • கசாபுக்கு பிரியாணி கொடுத்ததுபோதும், உடனே தூக்கிலிட...
      • இலங்கை ராணுவ அதிகாரிகள் திருப்பி அனுப்பப்படுவார்கள...
      • ஆளில்லா விமானங்கள் மூலம் கடல் பகுதியை கண்காணிக்கும...
      • இளவரசர் ஹாரிக்கு ‘நிர்வாண’ சல்யூட் :ஆடை அவிழ்க்கும...
      • பாஜக பிரதமர் வேட்பாளர்: நரேந்திர மோடிக்கு ஆதரவு 42...
      • கூடங்குளம் அணுமின் நிலைய வழக்கில் 31-ந் தேதி தீர்ப்பு
      • கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது?
      • சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்கள் மோதல்: முதல்வர்...
      • அமெரிக்காவில் 4 மாகாணங்களில் அவசர நிலை அறிவிப்பு
      • கமலுடன் மோதுகிறார் சூர்யா!
      • ராமஜெயம் கொலை வழக்கு : திடுக்கிடும் தகவல்
      • சீனா பக்கம் சாய்கிற இலங்கை உங்களுக்கு நட்பு நாடா?:...
      • இந்தியாவில் பிச்சைக்காரப் பெண்கள் கூட தங்க நகையுடன...
      • தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் எந்த நேரத்திலும் உயரலாம்
      • 4-வது திருமணத்துக்கு முயற்சி: நடிகர் திருமண மோசடி-...
      • ஆளுக்குப் 10 கேள்வி, பதில் சொல்லுங்க.. மன்மோகன், க...
      • பில்லா 2 டி.வி.யில் ஒளிபரப்ப தடை
      • கற்பழிப்பை ஆதரித்துப் பேசிய அமைச்சர் மீது செருப்பு...
      • 'நீர்க்குமிழி' படம் ரீமேக்: நாகேஷ் வேடத்தில் விவேக்
      • தெருவோரத்தில் காதல் ஜோடி உறவு... செல்போனில் டவுன்ல...
      • இரு வாரத்தில் சாதனை:சல்மான்கான் படம் ரூ.210 கோடி வ...
      • மதுரை ஆதீனத்திற்கு திடீர் சுகவீனம்.... கொடைக்கானலி...
      • செவ்வாய் கிரகத்தில் இருந்து கேட்ட மனித குரல்: கியூ...
      • சிங்கள ராணுவத்துக்கு இந்தியாவில் அளிப்போம்:இந்தியா
      • தற்கொலைக்கு முயலவில்லை:மாத்திரைகளை தின்றுவிட்டேன்-...
      • கலைஞர் வழியில் இணைய தளம் தொடங்குகிறார் நரேந்திரமோடி
      • நிர்வாண போட்டோ :ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறிய இள...
      • தென் அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்ச...
      • விதவைப் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் செ...
      • எனது மவுனம் ஆயிரம் பதில்களைவிட சிறந்தது: பிரதமர் ம...
      • பார்ட்டி, ஆட்டம் பாட்டம்: 2 பெண்கள் தலையை துண்டித்...
      • சூதாட்டம் மூலம் புழக்கத்தில் விட்ட கள்ள நோட்டு கும...
      • மாஜி அமைச்சர் பொன்னேரி சுந்தரம் வீடு அடித்து நொறுக...
      • தமிழர்கள் வசித்த பகுதியில் இலங்கை ராணுவ வீரர்களுக்...
      • நடிகை சுஜிபாலா திடீரென தற்கொலை முயற்சி
      • கிரானைட் முறைகேடு: மு.க.அழகிரி மகன் பிடிக்க தீவிரம்
      • வாரத்திற்கு 5 நாள்... 'டெய்லி' 7 மணி நேரம் முக்கல்...
      • ரஜினி ரசிகரான சசிகுமார்!
      • கூவத்தின் வரலாறு கூட தெரியாத குஷ்புவெல்லாம்.... ரா...
      • செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் திரைக்கு வர...
      • 'எல்லாவற்றையும்' முடித்து விட்டு 'எஸ்கேப்'... காதல...
      • மலேசியாவிலும் நித்தி.யால் சர்ச்சை
      • தானம் செய்த சிறுநீரகத்தை குப்பையில் வீசிய நர்சு
      • கார்த்தி பட ஷுட்டிங்கில் இருந்து அழுது கொண்டே ஓடிய...
      • ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு வருமா...
      • செந்தூரானை விடுதலை செய்யக் கோரி வைகோ, நாளை உண்ணாவி...
      • ஜுனியர் உலகக் கோப்பை: 3வது முறை வென்று இந்தியா சாதனை
      • அருந்ததி, நந்தகியுடன் ஏழு ஹீரோக்கள் அடிக்கும் 'கூத...
      • பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி தொடருமா?: ஈ....
      • மன்மோகன்,கத்காரி வீடுகளை முற்றுகையிட முயன்ற அன்னா ...
      • தமன்னாவுடன் ஹன்சிகா மோதல்
      • வருகிறது இன்னொரு மைனா
      • அசாமில் மீண்டும் வன்முறை: 5 பேர் குத்திக்கொலை- கலவ...
      • நிலவில் கால் பதித்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங் ...
      • ஸ்ரேயா 2 மாதம் களரி பயிற்சி
      • யுவனுடன் பணிபுரிவது பாக்கியம் :எம்.எஸ்.விஸ்வநாதன்
      • பென்ஷனுக்காக விதவைக் கோலம் பூண்ட பெண்கள்
      • விஜய், சூர்யா - அதுக்கு செட்டாக மாட்டாங்க! பார்த்த...
      • ஆசிரியர்களுக்கு மறு தகுதி தேர்வு!
      • அன்னா ஹசாரே குழுவில் நக்சலைட்டுகள்: சுப்பிரமணியசாம...
      • ஷங்கருக்கு ’நோ’ சொன்ன சந்தானம்!
      • இந்தியாவில் சிங்கள ராணுவத்துக்கு பயிற்சி அளிப்பதை ...
      • நாளை இறுதிப்போட்டி: ஜுனியர் உலககோப்பையை இந்தியா கை...
      • இலங்கையை குறி வைக்கும் இந்திய ஏவுகணைகள்?- இந்தியா ...
      • அண்ணா ஆர்ச் திங்கட்கிழமை இடிப்பு: துண்டு துண்டாக உ...
      • பொதுக்கூட்டத்தில் மம்தாவை நோக்கி பாய்ந்த விவசாயி ந...
      • விபச்சார விடுதி நடத்திய முன்னாள் மிஸ் ஸ்ரீலங்கா அழ...
      • ஆச்சிக்கு மூச்சுத் திணறல்: ஆஸ்பத்திரியில் அனுமதி
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.