அதிமுக கூட்டணியில் மதிமுக இடம்பெறாதது இழப்புதான் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா கூறினார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
அதிமுக கூட்டணிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி சேர்ந்ததை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். மக்கள் எதிர்பார்த்த கூட்டணியாக இந்த கூட்டணி உள்ளது.
அதிமுக கூட்டணியில் இடம்பெற நாங்கள் எந்தவித நிபந்தனையும் விதிக்கவில்லை. ஒருவேளை எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் தேமுதிகவின் நிலை குறித்து பின்னர் அறிவிப்போம்.
அதிமுக கூட்டணியில் மதிமுக இடம்பெறாதது இழப்புதான். அவர்கள் தேர்தலையும் புறக்கணித்துள்ளனர். இருப்பினும், எங்களது வெற்றிவாய்ப்பு பாதிக்காது என்றார்.
No comments:
Post a Comment