தமிழக மீனவர்கள் படுகொலைக்கு காரணமான இலங்கை அரசைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு தமிழக காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று காலை சென்னை டிடிகே சாலையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு தமிழக காங்கிரஸ் சார்பில் தங்கபாலு தலைமையில் அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் இலங்கை அரசை வன்மையாக கண்டிக்கிறோம் என்று தங்கபாலு பேசினார்.
தங்கபாலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கும்போது, அதற்கு பின்னால் மைலாப்பூர் தொகுதி 45வது வட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சதீஷ் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் ஒன்று கூடினர். அப்போது தங்கபாலு உருவபொம்மையை எரித்தனர்.
தங்கபாலு தனது சுயலாபத்துக்காக கட்சி விரோத செயல்களில் ஈடுபடுகிறார். கட்சியை பலவீனமாக்க முயற்சிக்கிறார். இலங்கை அரசை கண்டித்து தங்கபாலு தலைமையில் ஆர்ப்பாட்டம் என்பது கண்துடைப்பு நாடகம் என்று சதீஷ் தலைமையில் உருவபொம்யை எரித்தவர்கள் கோஷம் எழுப்பினர்.

No comments:
Post a Comment