திருச்சியில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் சரவணன் பிரசாரம் செய்தார். அவர் கூறியதாயது:-
தமிழகம் முழுவதும் தி.மு.க.வுக்கு எதிராக மக்கள் மவுன புரட்சிக்கு தயாராகி விட்டனர். அ.தி.மு.க. அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்-அமைச்சராவார். இதையாராலும் தடுக்க முடியாது. காமெடி நடிகர் வடிவேலு பிரசாரத்தில் காமெடி செய்கிறார்.
திருமணத்திற்கு முன்பு பெண்கள் உறவு வைத்துக் கொள்ளலாம் என்று குஷ்பு கூறியபோது பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அவரை எதிர்த்து போராட்டம் நடத்தினர். இப்போது குஷ்புவை எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள்.? முரண்பட்ட கூட்டணி வைத்து உள்ளனர். வடிவேலு, குஷ்பு பிரசாரம் எல்லாம் எடுபடாது.
இவ்வாறு நடிகர் சரவணன் பேசினார்.
No comments:
Post a Comment