விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Saturday, August 25, 2012

    நம்புங்கப்பா விரைவில் சீரான மின்சாரம் வழங்குவோம்...:அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அறிக்கை

    மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 
    தமிழ்நாட்டின் மின்சாரத் தேவை 11,500 முதல் 12,800 மெகாவாட் ஆகவும் மற்றும் தினசரி பயன்பாடு 230 முதல் 250 மில்லியன் யூனிட் ஆகவும் உள்ளது. இந்தத் தேவையை பூர்த்தி செய்ய அனல் மின் திட்டங்கள் மூலம் 3,000 மெகாவாட், எரிவாயு மூலம் 500 மெகாவாட், காற்றாலை மூலம் 3000 மெகாவாட், மத்திய தொகுப்பு மூலம் 3,000 மெகாவாட், தனியார் மின் நிறுவனங்கள் மூலம் 1,180 மெகாவாட் திறனும், நீர் மின் நிலையங்கள் மூலம் மீதத் தேவைக்கும் மின் உற்பத்தி பெறப்பட்டு வருகிறது. 

    கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் மின் உற்பத்தித் திறன் அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. அதனால், தமிழ்நாட்டின் மின் தேவைக்கும், உற்பத்தி செய்யும் அளவிற்கும் இடையே 3500 மெகாவாட் அளவிற்கு மிகப்பெரிய இடைவெளி எற்பட்டுள்ளது. இதனால் தமிழக மக்கள் மிகுந்த துயருக்கு ஆளாகியும், தொழிற்சாலைகள் நலிவடையும் நிலைமைக்கும் தள்ளப்பட்டன. 

    முதல் அமைச்சர் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு எரிசக்தித்துறை, மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மற்றும் மின் தொடரமைப்புக் கழக அதிகாரிகளுடன் பல ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி புதிய மின்திட்டப் பணிகளை முடுக்கிவிட்டார். தொடர் நடவடிக்கையாக முதல் அமைச்சர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் மீண்டும் விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 

    அதில், முதல் அமைச்சரின் சீரிய ஆலோசனைகளை பெற்று, தமிழ்நாட்டில் மின் உற்பத்தித் திறனை கூட்டுவதற்கு புதிய மின் திட்டப் பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுத்து, 3300 மெகாவாட் அளவிற்கு மின் உற்பத்தியை விரைவில் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. தமிழகத்தில்தான், நாட்டின் மொத்த அளவு புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியான 21903.8 மெகாவாட்டில் 36.1 சதவீதம் அதாவது 7913.57 மெகாவாட் அளவிற்கு உற்பத்தி செய்யும் திறன் நிறுவப்பட்டுள்ளது. 

    உலகின் எந்தப் பகுதியிலும் இந்த அளவு சதவீதம் புதுப்பிக்கத்தக்க மின்சாரம் பயன்பாட்டில் இல்லை. இதில், காற்றாலை மூலம் பெறப்படும் மின்சாரம் கடந்த 19 ந் தேதியில் 3980 மெகாவாட் அளவாக இருந்தது. இது, நேற்று முன்தினம் 299 மெகாவாட் அளவிற்கு குறைந்தது. இதை ஓரளவேனும் ஈடுகட்ட நீர்மின் நிலையங்கள் மூலமாக தேவையான மின் உற்பத்தி செய்ய வேண்டும். 

    ஆனால், பருவமழை மிகக் குறைவாகவே இந்த ஆண்டு பெய்து நீர் நிலைகளில் குறைவான கொள்ளளவே பெறப்பட்டுள்ளது. மேலும், மத்திய தொகுப்பில் தேசிய மின் உற்பத்திக் கழகத்தின் (என்.டி.பி.சி.) ஆந்திரா-ராமகுண்டம், ஒரிசா- தால்சர் அனல் மின் நிலையங்கள் மற்றும் அணுமின் நிலையங்களில் ஏற்பட்டுள்ள உற்பத்தி குறைபாட்டினால் 1045 மெகாவாட் அளவிற்கு தமிழ்நாட்டிற்கு மின்சாரம் குறைவாகவே கிடைக்கிறது. 

    இருப்பினும், பல்வேறு நடவடிக்கைகள் மூலமாக தமிழக மக்களுக்கு மின் தேவையை குறித்த மின் கட்டுப்பாட்டு முறைகளின்படி பூர்த்தி செய்யப்பட்டு வந்தது. தற்போது தென் மண்டல தொகுப்பிற்கு மின்சாரம் வர வேண்டிய மின் தொடரில் ஏற்படும் மின்சுமை காரணமாக தமிழகம் உட்பட மற்ற தென் மாநிலங்களிலும் நிலவும் பற்றாக்குறை அதிகபட்சமாக உள்ளது. 

    கடந்த 24-ந் தேதி அதிகபட்ச தேவையின் மின்பற்றாக்குறை ஆந்திராவில் 26 சதவீதமாகவும் கர்நாடகத்தில் 19.5 சதவீதமாகவும், தமிழகத்தில் 18 சதவீதமாகவும் உள்ளது. தென் மண்டல கட்டமைப்பை நாட்டின் பிற மின் கட்டமைப்பில் இணைக்கக் கூடிய முக்கியமான மின் தொடர்கள் அமைக்கும் பணி மத்திய அரசின் நிறுவனங்களால் குறித்த காலத்தில் நிறைவு பெறாமல் இருக்கிறது. 

    இப்பணி எதிர்வரும் 2014-ம் ஆண்டு நிறைவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தமிழக மின்வாரியம், குஜராத் மற்றும் வடமாநிலங்களிலிருந்து 855 மில்லியன் யூனிட் கொள்முதல் செய்ய பணம் பட்டுவாடா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தாலும், 27 சதவீதமாகிய 232 மில்லியன் யூனிட்டே கட்டமைப்பில் பெறப்பட்டு வருகிறது. 

    மேலும், தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விதித்த வழிமுறைகளின் படியும், மின்சாரக் கொள்முதல் அளவிற்கும், விலைக்கும் வரம்பு விதித்ததின் காரணமாகவும் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கடுமையான நிதி நெருக்கடி காரணமாகவும் போதுமான மின்சாரம் கொள்முதல் செய்ய இயலவில்லை. 

    மத்திய ஒழுங்குமுறை ஆணையம் இந்திய கட்டமைப்பின் அதிர்வெண்ணை (49.50 - 50.20 ) என்ற அளவிலிருந்து (49.70 - 50.20) என்ற அளவில் இயக்குவதற்கும், திட்டமிடா மின் பரிமாற்றத்திற்கான நிர்ணய கட்டணத்தை அதிகரித்தும் இந்திய கட்டமைப்பு விதியில் மாற்றங்களை அமல்படுத்த ஆணையிட்டது. 

    மேற்படி உத்தரவு தமிழகத்திற்கு கூடுதலான நிதிச்சுமை மற்றும் பயனீட்டாளர்களுக்கு மேலும் மின் தடை செய்ய நேரிடும் என்பதால், முதல்-அமைச்சர், பிரதமருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி கடிதம் எழுதி இந்த மாற்றங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்து ஆணையிட கேட்டுக் கொண்டார். 

    ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், தமிழ்நாடு உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம், இவ்வாணையை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் இடைக்கால தடை உத்தரவு பெற்றுள்ளது. ஆயினும், மத்திய ஒழுங்குமுறை ஆணையம் இத்தடையை எதிர்த்து புதுடில்லியிலுள்ள உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. 

    மேலும், கடந்த ஜுலை 30-ந் தேதி வடக்கு மின் கட்டமைப்பிலும், 31-ந் தேதி வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு மின் கட்டமைப்பில் ஏற்பட்ட பழுது காரணமாக தென் மண்டலம் மற்றும் மேற்கு மண்டலம் நீங்கலாக நாட்டின் அனைத்துப் பகுதியிலும் 22 மாநிலங்களில் மிகப்பெரிய மின் தடை ஏற்பட்டது. 

    இந்த சம்பவத்திற்கு பிறகு மத்திய மின்கட்டமைப்பு நிர்வாகம் கடந்த 16-ந் தேதிமுதல் மின்கட்டமைப்பின் அதிர்வெண் 49.50 எச்.இசட் என்ற அளவிற்கு கீழ் செல்லும் நிலையில் மின் கட்டமைப்பின் இயக்க விதிமுறைகளை கடுமைப்படுத்தியுள்ளது. தடையை மீறும் பட்சத்தில் தண்டனை முறைகளையும் கடுமைப்படுத்தியதோடு அல்லாமல் மாநிலங்களுக்கு இடையேயான மின் தொடரை தானாக துண்டிக்கும் வழிவகையும் செய்துள்ளது. 

    எனவே, பெங்களூரில் உள்ள தென்மண்டல கட்டுப்பாட்டு மையம் விதிக்கும் உத்தரவுகளை மின் கட்டமைப்பு பாதுகாப்பு விதிகளின்படி கண்டிப்பாக அனுசரிக்க வேண்டியுள்ளது. இதனால் மின்தடை ஏற்படுத்தப்படுவதை தவிர்க்க இயலவில்லை. தென்மண்டல கட்டுப்பாட்டு மையம் மற்றும் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவிற்கிணங்க கடந்த 16-ந் தேதிமுதல் மின் தொகுப்பு கட்டமைப்பின் பாதுகாப்பு விதிகளை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. 

    முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்பேரில் தமிழகத்தில் நடைபெற்று வரும் புதிய மின் திட்டங்களில், உற்பத்தி மிக விரைவில் தொடங்கப்பட உள்ளது. அவ்வாறு மின் உற்பத்தி தொடங்கப்பட்டவுடன் தமிழக மக்களுக்கு விரைவில் சீரான மின்சாரம் வழங்க முடியும். 

    தற்போது மின்தடையால் ஏற்படும் சிரமங்களைக் களைய தமிழக அரசு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மற்றும் மின் தொடரமைப்புக் கழகம் சேர்ந்து எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். 

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


    Posted by விழியே பேசு... at 10:02 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ▼  August (482)
      • கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான அத்தனை வழ...
      • பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை: மன்மோகன் சிங் தி...
      • தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வெட்டிக்கொலை: கொலையாள...
      • இந்திரா காந்தியிடம் மன்னிப்பு கேட்ட நீல் ஆம்ஸ்டிராங்
      • சந்தானத்தால் கேன்சலான ஷங்கரின் 'ஐ' ஷூட்டிங்
      • பெங்களூர் டெஸ்ட்: டெய்லர் சதத்தால் வலுவான நிலையில்...
      • குஜராத் கலவர வழக்கில் அதிரடி தீர்ப்பு: முன்னாள் அம...
      • ராஜீவ் காந்தி கொலை வழக்கு: புயல் கிளப்ப தயாராகும் ...
      • உலக கோப்பையை வென்ற ஜுனியர் கேப்டன் உன்முக் சந்த் த...
      • இந்தியாவில் முதன்முறையாக இயக்குநர் சங்க இணையதளம்!
      • பாகிஸ்தான்- சீனாவுக்கு செக் வைக்கும் இந்தியா !
      • பாகன் படத்திற்காக குத்துப்பாட்டு எழுதிய பாரதியார் ...
      • சஹானாஸ் பேட்டி எதிரொலி சூப்பர் மார்க்கெட் உரிமையா...
      • திருட்டு டிவிடியில் முகமூடி படத்தை பாருங்கள் - மிஸ...
      • கல்யாண ராணி சஹானாஸ் பரபரப்பு பேட்டி ..!
      • திருச்சிக்கு வந்த சிங்கள மாணவர்கள்... நாம் தமிழர் ...
      • ஒரே கதையில் இரண்டு படங்கள்
      • மோடி பெயரை கேட்டாலே பயத்தில் அலறும் காங்கிரஸ்: பார...
      • பட முன்னோட்டம் : முகமூடி
      • பிரணாப் முகர்ஜியின் பேச்சை நம்பியே உண்ணாவிரதத்தை க...
      • ஒருநாள் போட்டியிலும் முதலிடம் பிடித்து தென்னாப்பிர...
      • ஜெயலலிதா முன்னிலையில் கலைஞரை புகழ்ந்து பேசி:அதிர வ...
      • அமெரிக்கா: 6 சீக்கியர்களை கொன்றவர் தற்கொலை செய்ததா...
      • ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒருத்தர் கூட பாஸாகாத புத...
      • கசாப் கருணை மனு தாக்கல் செய்தால் ...: சுசில் குமார...
      • ராஜ்யசபா எம்.பி.க்களுக்கு ரூ. 2 கோடியில் 4 படுக்கை...
      • ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் பிளவு ஏற்பட்டுள்ளது: க...
      • பத்திரிகையாளர்களிடம் அழகிரி டென்சன்
      • கிரானைட் குவாரி முறைகேடு: இடைக்கால அறிக்கை!
      • எம்.ஜி.ஆர்-யே மிஞ்சிவிட்டார் சமுத்திரக்கனி - இயக்க...
      • பட்டர்-ரொட்டி சாப்பிடும் பா.ஜ.. சோனியா கடும் தாக்கு
      • உடல் காயங்களை குணப்படுத்தும் ஸ்பிரே மருந்து
      • கசாபுக்கு பிரியாணி கொடுத்ததுபோதும், உடனே தூக்கிலிட...
      • இலங்கை ராணுவ அதிகாரிகள் திருப்பி அனுப்பப்படுவார்கள...
      • ஆளில்லா விமானங்கள் மூலம் கடல் பகுதியை கண்காணிக்கும...
      • இளவரசர் ஹாரிக்கு ‘நிர்வாண’ சல்யூட் :ஆடை அவிழ்க்கும...
      • பாஜக பிரதமர் வேட்பாளர்: நரேந்திர மோடிக்கு ஆதரவு 42...
      • கூடங்குளம் அணுமின் நிலைய வழக்கில் 31-ந் தேதி தீர்ப்பு
      • கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது?
      • சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்கள் மோதல்: முதல்வர்...
      • அமெரிக்காவில் 4 மாகாணங்களில் அவசர நிலை அறிவிப்பு
      • கமலுடன் மோதுகிறார் சூர்யா!
      • ராமஜெயம் கொலை வழக்கு : திடுக்கிடும் தகவல்
      • சீனா பக்கம் சாய்கிற இலங்கை உங்களுக்கு நட்பு நாடா?:...
      • இந்தியாவில் பிச்சைக்காரப் பெண்கள் கூட தங்க நகையுடன...
      • தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் எந்த நேரத்திலும் உயரலாம்
      • 4-வது திருமணத்துக்கு முயற்சி: நடிகர் திருமண மோசடி-...
      • ஆளுக்குப் 10 கேள்வி, பதில் சொல்லுங்க.. மன்மோகன், க...
      • பில்லா 2 டி.வி.யில் ஒளிபரப்ப தடை
      • கற்பழிப்பை ஆதரித்துப் பேசிய அமைச்சர் மீது செருப்பு...
      • 'நீர்க்குமிழி' படம் ரீமேக்: நாகேஷ் வேடத்தில் விவேக்
      • தெருவோரத்தில் காதல் ஜோடி உறவு... செல்போனில் டவுன்ல...
      • இரு வாரத்தில் சாதனை:சல்மான்கான் படம் ரூ.210 கோடி வ...
      • மதுரை ஆதீனத்திற்கு திடீர் சுகவீனம்.... கொடைக்கானலி...
      • செவ்வாய் கிரகத்தில் இருந்து கேட்ட மனித குரல்: கியூ...
      • சிங்கள ராணுவத்துக்கு இந்தியாவில் அளிப்போம்:இந்தியா
      • தற்கொலைக்கு முயலவில்லை:மாத்திரைகளை தின்றுவிட்டேன்-...
      • கலைஞர் வழியில் இணைய தளம் தொடங்குகிறார் நரேந்திரமோடி
      • நிர்வாண போட்டோ :ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறிய இள...
      • தென் அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்ச...
      • விதவைப் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் செ...
      • எனது மவுனம் ஆயிரம் பதில்களைவிட சிறந்தது: பிரதமர் ம...
      • பார்ட்டி, ஆட்டம் பாட்டம்: 2 பெண்கள் தலையை துண்டித்...
      • சூதாட்டம் மூலம் புழக்கத்தில் விட்ட கள்ள நோட்டு கும...
      • மாஜி அமைச்சர் பொன்னேரி சுந்தரம் வீடு அடித்து நொறுக...
      • தமிழர்கள் வசித்த பகுதியில் இலங்கை ராணுவ வீரர்களுக்...
      • நடிகை சுஜிபாலா திடீரென தற்கொலை முயற்சி
      • கிரானைட் முறைகேடு: மு.க.அழகிரி மகன் பிடிக்க தீவிரம்
      • வாரத்திற்கு 5 நாள்... 'டெய்லி' 7 மணி நேரம் முக்கல்...
      • ரஜினி ரசிகரான சசிகுமார்!
      • கூவத்தின் வரலாறு கூட தெரியாத குஷ்புவெல்லாம்.... ரா...
      • செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் திரைக்கு வர...
      • 'எல்லாவற்றையும்' முடித்து விட்டு 'எஸ்கேப்'... காதல...
      • மலேசியாவிலும் நித்தி.யால் சர்ச்சை
      • தானம் செய்த சிறுநீரகத்தை குப்பையில் வீசிய நர்சு
      • கார்த்தி பட ஷுட்டிங்கில் இருந்து அழுது கொண்டே ஓடிய...
      • ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு வருமா...
      • செந்தூரானை விடுதலை செய்யக் கோரி வைகோ, நாளை உண்ணாவி...
      • ஜுனியர் உலகக் கோப்பை: 3வது முறை வென்று இந்தியா சாதனை
      • அருந்ததி, நந்தகியுடன் ஏழு ஹீரோக்கள் அடிக்கும் 'கூத...
      • பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி தொடருமா?: ஈ....
      • மன்மோகன்,கத்காரி வீடுகளை முற்றுகையிட முயன்ற அன்னா ...
      • தமன்னாவுடன் ஹன்சிகா மோதல்
      • வருகிறது இன்னொரு மைனா
      • அசாமில் மீண்டும் வன்முறை: 5 பேர் குத்திக்கொலை- கலவ...
      • நிலவில் கால் பதித்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங் ...
      • ஸ்ரேயா 2 மாதம் களரி பயிற்சி
      • யுவனுடன் பணிபுரிவது பாக்கியம் :எம்.எஸ்.விஸ்வநாதன்
      • பென்ஷனுக்காக விதவைக் கோலம் பூண்ட பெண்கள்
      • விஜய், சூர்யா - அதுக்கு செட்டாக மாட்டாங்க! பார்த்த...
      • ஆசிரியர்களுக்கு மறு தகுதி தேர்வு!
      • அன்னா ஹசாரே குழுவில் நக்சலைட்டுகள்: சுப்பிரமணியசாம...
      • ஷங்கருக்கு ’நோ’ சொன்ன சந்தானம்!
      • இந்தியாவில் சிங்கள ராணுவத்துக்கு பயிற்சி அளிப்பதை ...
      • நாளை இறுதிப்போட்டி: ஜுனியர் உலககோப்பையை இந்தியா கை...
      • இலங்கையை குறி வைக்கும் இந்திய ஏவுகணைகள்?- இந்தியா ...
      • அண்ணா ஆர்ச் திங்கட்கிழமை இடிப்பு: துண்டு துண்டாக உ...
      • பொதுக்கூட்டத்தில் மம்தாவை நோக்கி பாய்ந்த விவசாயி ந...
      • விபச்சார விடுதி நடத்திய முன்னாள் மிஸ் ஸ்ரீலங்கா அழ...
      • ஆச்சிக்கு மூச்சுத் திணறல்: ஆஸ்பத்திரியில் அனுமதி
      • ஆப்பிளை காப்பி அடித்த 'சாம்சங்' ரூ5,500 கோடி இழப்ப...
      • கல்யாண ராணி சகானாவின் சாகச லீலைகள்
      • 'கத்தியால குத்துவேன்' - சீமான்; 'தம்பி கையால் கொல்...
      • 'தல'யும் 'வாலு'ம் சந்தித்த போது..!
      • முத்தக் காட்சி பற்றி கேட்காதீர்கள் - ஆண்ட்ரியா
      • "சிவகாசி பெண்கள் கல்லூரியை வெடிகுண்டு வைத்து தகர்ப...
      • கிரானைட் மோசடி: முன்னாள் அமைச்சர்கள் தொடர்பு அம்பலம்
      • தமிழ் படங்களுக்கு நோ கால்ஷீட் : அசின்
      • ‘விஸ்வரூபம்’ அக்டோபரில் ரிலீஸ்: செப்டம்பரில் மாதம்...
      • ரூ.85 லட்சம் மோசடி செய்ததாக பிரபல கதாநாயகி கைது!
      • கல்யாண ராணி சஹானாசுடன் மோசடி கும்பலுக்கு தொடர்பா?
      • நம்புங்கப்பா விரைவில் சீரான மின்சாரம் வழங்குவோம்.....
      • ஜனாதிபதியின் ரூ.6 கோடி பென்ஸ் கார் போச்சே....
      • பட அதிபரிடம் பணம் மோசடி செய்த காமெடி நடிகர்
      • சல்மான்கானுக்கு பேசப்பட்ட சம்பளத்தால் பரப்பரப்பு
      • ஈழம் என்று பேசகூடாது என்றதும் எனக்கு அடங்காத கோபம...
      • சூப்பர் ஸ்டாரை காலத்தை வென்றவராகக் காட்டவே கோச்சடை...
      • 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட்: இலங்கை அணி அறிவிப்பு
      • ஒரு பெண்ணால் 50 பேரை மணந்து ஏமாற்ற முடியுமா?: சகான...
      • ஒரே நேரத்தில் 2 பேருடன் இன்பமாக இருந்தாரா கிம் கர்...
      • சென்னையில் சுப்பிரமணியசாமி வீட்டை முற்றுகையிட முயன...
      • ஏக் தா டைகர் ரீமேக்கில் விஜய் - இயக்கம் ஜெயம் ராஜா?
      • கற்பழிப்பு வழக்கில் ஜனாதிபதியின் பாதுகாவலர்களுக்கு...
      • சன் குழும சி.இ.ஓ.வாக களமிறக்கப்படுகிறார் கலாநிதி ம...
      • கேரள அழகி சகானா வலையில் வீழ்ந்த சினிமா டைரக்டர்
      • கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொன்ற 6 குழந்தைகள...
      • தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு அதிகரிப்பு 12 மணி ந...
      • செவ்வாய்கிரகத்தில் வேற்றுகிரகவாசிகள்? மனிதர்களின் ...
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.