விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Sunday, April 24, 2011

    உயிர்த்தெழுந்தாரே ஜெயித்தெழுந்தாரே: ஈஸ்டர் ஸ்பெஷல்


    ஈஸ்டர் கொண்டாடுவதன் நோக்கம்: இயேசு உயிர்த்தெழுந்தார், இன்றும் ஜீவிக்கிறார் என்ற நம்பிக்கையுடன் ஈஸ்டர் கொண்டாடப்படுகிறது. அவரது பிறப்பை கிறிஸ்துமஸ் என்கிறோம். ஈஸ்டரை ஒட்டி ஜெருசலேம் நகரில் மக்கள் பவனி வருவதை குருத்தோலை ஞாயிறு என்கிறோம். சீடர்களால் அவர் காட்டிக்கொடுக்கப்பட்டதை "பெரிய வியாழன்' என்றும், அவரது மரண நாளை "புனித வெள்ளி' என்றும் நினைவு கூர்கிறோம். சிலுவையில் அறையப்பட்டு மரணத்தை சந்தித்து, தான் கூறிய படியே, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த சம்பவமான, "ஈஸ்டர்' பெருநாளே, உலக வரலாறுக்கு வித்திட்ட நாளானது.

    பூமியில் தோன்றிய அரசர்கள், அறிஞர்கள், தலைவர்கள் அனைவருமே ஒரு நாட்டுக்காக, ஒரு குலத்துக்காக பிறந்து வாழ்ந்து இறக்கின்றனர். அவர்கள் பிறப்பது பற்றிய தகவல் ஏதும் நமக்கு தரப்படுவதில்லை. ஆனால், இயேசு பிறக்க இருப்பதை, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தீர்க்கதரிசிகள் முன்னுரைத்தனர். அவரது பிறப்பு முதல் இறப்பு வரை என்னென்ன நடக்கும் என்பதை எடுத்துரைத்தனர். இதுபற்றி பைபிளில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, அவர்கள் சொன்ன அனைத்து வார்த்தைகளும் நிறைவேறியுள்ளது. ""உயிரோடிருக்கிறவரை, நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுவதென்ன? அவர் இங்கே இல்லை, உயிர்த்தெழுந்தார்,'' என பைபிள் வசனம் கூறுகிறது.

    உலக வரலாறு பற்றி பைபிள் கூறுவதைக் கேளுங்கள். முதல் மனிதனான ஆதாம், கடவுளின் கட்டளையை மீறி செய்த பாவத்தால், ஒட்டுமொத்த மனுக்குலமே பாவ வாழ்க்கையை தொடர்ந்தது. தான் படைத்த மனுக்குலம், தன்னை போல் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்றே கடவுள் விரும்பினார். மனிதனும், ஒவ்வொரு முறையும் தான் செய்யும் பாவ செயலால் மன வேதனை அடைந்தான். அதற்கு பரிகாரமாக, கடவுளின் மன்னிப்பை பெற விலங்கு, பறவைகளின் ரத்தத்தை கடவுளுக்கு பலியாக செலுத்தினான். ஆனாலும், பாவச்செயல் தொடர்ந்தது. இதில் இருந்து மக்களை விடுவிக்க கடவுள் ஒரு கன்னிப்பெண்ணின் வயிற்றில் பிறந்தார். யூத மக்கள் மத்தியில் முன்மாதிரியாக வாழ்ந்து தன்னை வெளிப்படுத்தினார். ஆனால், கடவுளின் கட்டளைகளை மீறி வாழ்ந்த யூதர்கள் புதிய கட்டளைகளை வாழ்க்கை முறைகளை மாற்றி கொள்ள விரும்பாமல் இயேசுவை ஒழித்து கட்ட திட்டம் தீட்டினர். அப்போது இயேசுவின் சீடர்களில் ஒருவனாகிய யூதாஸ் 30 வெள்ளிக்காசுக்காக அவரை காட்டிக்கொடுத்தான். இயேசுவும் சிலுவை மரணத்தை சந்தித்து, தன் ரத்தத்தை சிந்தி, மனுக்குல பாவத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார். "" தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான். அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான். கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியாக எப்போதும் பரிசுத்தமாக வாழவேண்டும்,'' என பைபிள் தெளிவுபடுத்துகிறது.

    ஈஸ்டர் காலத்தில் மக்கள் தவவாழ்வு வாழ்கின்றனர். தங்கள் சுகங்களை குறைத்துக் கொள்கின்றனர். ஆனால், ஆண்டுதோறும் 40 நாட்கள் மட்டுமே விரதம் இருந்தால் போதாது. மீதியுள்ள நாட்களிலும் பாவவாழ்வுக்கு ஒரு சதவீதம் கூட இடம் கொடுக்கக்கூடாது. நமக்கு 'ஈஸ்டர்' உணர்த்தும் தத்துவம் இதுவே.

    உயிரை கொடுத்தார்; உலகை மீட்டார்: இயேசு மரித்த பிறகு அவரது உடலையும், சிலுவையில் அறையப்பட்ட மற்றவர்களின் உடலையும் சிலுவைகளிலிருந்து அகற்றப்பட வேண்டிய நேரம் வந்தது. அவர்கள் இயேசு அறையப்பட்டிருந்த சிலுவையின் அருகில் வந்தனர். அவர் மரித்துபோயிருந்தார். ஒரு போர்சேவகன் அவரது விலாவில் குத்தினான். உடனே ரத்தமும், தண்ணீரும் வெளிப்பட்டது. இதன் பிறகு யோசேப்பு, மன்னன் பிலாத்துவிடம் சென்று, இயேசுவின் சரீரத்தை எடுத்துக் கொண்டு போக அனுமதி கேட்டார். பிலாத்துவும் அனுமதித்தான். இயேசுவின் உடல் அருகே வந்த நிக்கோதேமூன் என்பவன் இயேசுவின் சரீரத்தில் மணம் மிக்க சுகந்தப்பொருட்களைத்தடவி, துணியில் சுற்றி கட்டினான். கண்மலையில் வெட்டியிருந்த கல்லறைக்குள் இயேசுவின் சரீரத்தை வைத்தனர். கல்லறை வாசலில் பெரிய கல்லைப்புரட்டி வைத்தார்கள். அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இருள்நீங்காத பொழுதில் ஆண்டவருடைய கல்லறைக்கு மகதலேனா மரியாள் என்பவரும், யாக்கோபின் தாயாகிய மரியாள் சலோமியும் சுகந்த வார்க்கங்களை கொண்டு சென்றனர்.

    கல்லறைக் கல்லை எப்படிப்புரட்டுவது என்று அவர்கள் பேசிக்கொண்டே சென்றனர். கல்லறை அருகே சென்றதும் கல் புரண்டு கிடந்ததைப் பார்த்தனர். "இதை யார் அகற்றியிருக்கக் கூடும்?'' என்றவர்களாய், கல்லறைக்குள் எட்டிப்பார்த்தனர். உள்ளே இயேசுவின் உடல் இல்லை. அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இயேசுவின் சீடர்களான சீமோன் பேதுரு, யோவான் ஆகியோரிடம் சென்று, ""யாரோ ஆண்டவரை கல்லறையிலிருந்து எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடத்தில் அவர் இல்லை,'' என்று சொன்னார்கள். இதன்பிறகு மற்ற பெண்களும் கல்லறைக்கு சென்றார்கள், அப்போது பிரகாசமுள்ள ஆடையணிந்த இருவரை கண்டார்கள். அந்தப்பெண்கள் நடுக்கமும், திகிலும் அடைந்தவர்களாய் கல்லறையை விட்டு அகன்றனர். அவர்கள் செல்லும் வழியில் இயேசு வந்து கொண்டிருந்தார். அவர்களை "வாழ்க' என்று வாழ்த்தியதுடன், அவர்களை நோக்கி, ""பயப்படாதிருங்கள், நீங்கள் போய் என் சீடர்கள் கலிலேயாவுக்குப் போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள், அவர்கள் அங்கே என்னைக் காண்பார்கள்,'' என்றார். இயேசு உயிர்த்தெழுந்த அதேநாளில் இரண்டு பேர் எம்மோவு நகரத்துக்குச் சென்றனர். அவர்களது முகம் துக்ககரமாக இருந்தது. அவர்களை இயேசு பார்த்தார்.""நீங்கள் ஏன் துக்கத்துடன் இருக்கிறீர்கள்?'' எனக் கேட்டார். அதற்கு அவர்கள், ""இயேசு என்ற தீர்க்கதரிசி சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார். அவரது உடலைக் கூட கல்லறையில் காணவில்லை,'' என்றனர். உடனே இயேசு அவர்களை நோக்கி, ""கிறிஸ்து தமது மகிமைகளை வெளிப்படுத்தும் நிலையில், இந்த பாடுகளையெல்லாம் அடைந்து தீரவேண்டுமல்லவா?'' என்றார்.இறந்த பிறகும் கூட விலா எலும்பில் குத்துப்பட்டவர் இயேசுபிரான். தெய்வீகமான அவர், மக்களை நல்வழிக்கு திருப்ப உயிரையே கொடுத்தார். தன்னுயிர் கொடுத்தேனும் பிறருக்கு சேவை செய்ய வேண்டும் என மக்களுக்கு உணர்த்தினார். இயேசுபிரான் உயிர்த்தெழுந்த இந்த நன்னாளில் அவரது போதனைகளைப் பின்பற்றி நடக்க உறுதி கொள்வோம்.

    ஈரமுள்ள இருதயம் இருக்கட்டும்: இங்கிலாந்தில் ஆலிவர்கிராம்வெல் ராணுவ தளபதியாக இருந்த போது ஒழுக்க விதிமுறைகள் கடுமையாக இருந்தன. ஒருசமயம் விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு இளம்வீரனை விசாரித்தார் ஆலிவர். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. ""நாளை மாலை ஆலயமணி அடிக்கும் போது இவன் சுட்டுக்கொல்லப்பட வேண்டும்,'' என உத்தரவிட்டார். மறுநாள் ஆலிவருடன் அதிகாரிகள், மக்கள் கூடினர். துப்பாக்கியுடன் ஒருவன் வீரனின் தலையை குறி வைத்தான். அனைவரும் மணிச்சத்தத்திற்காக காத்திருந்தனர். தண்டனை நேரம் கடந்துவிட்டது. மணி அடிக்கவே இல்லை. அப்போது, ஒரு பெண் கை எலும்பு நொறுங்கி ரத்தம் வழிய வந்தாள். அவள் ஆலிவரிடம், ""பிரபு, குற்றம் சாட்டப்பட்ட இவருக்கும், எனக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவருக்கு தண்டனை என அறிவிக்கப்பட்டதும் நேற்றே மணிக்கூண்டில் ஏறி, மணியின் இரும்பு நாக்கைப் பிடித்துக் கொண்டேன். மணி அடித்தவர் வேகமாக கயிறை இழுத்தார். நான் கையால் மணியின் நாக்கை பிடித்திருந்ததால் நாக்கு மணியின் மீது படவில்லை. மாறாக கயிறை இழுத்த வேகத்தில் என் கை முறிந்தது. மணியடிப்பவனுக்கு காது கேட்காது என்பது தங்களுக்கு தெரியும். அவன் மணியடித்துவிட்டதாக எண்ணி போய்விட்டான். இவரை எனக்காக விடுவியுங்கள்,'' என்றாள். ஆலிவரின் மனதில் கூட ஈரம் பொங்கியது. அந்த வீரனை விடுவித்தார். கர்த்தரும் இப்படித்தான், நாம் செய்த பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டார். அவர் அடைந்த தழும்புகளால் நாம் குணமானோம். அவர் மரித்து நம்மை காத்தார். அவரை ஈஸ்டர் மட்டுமல்ல, எந்நாளும் நினைவு கொள்வோம்.

    2426 மொழிகளில் எழுதப்பட்ட நூல்: கிறிஸ்து பிறப்பதற்கு 4000 ஆண்டு காலத்திற்கு முற்பட்ட வரலாறும், அவர் பிறந்த பின் உலகம் முடியும் வரை உள்ள நிகழ்வுகளும் பைபிளில் உள்ளது. ஆதாம் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களின் படைப்பும், இயேசுவின் பிறப்பும் அதில் கூறப்பட்டுள்ளது. பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என இரு பிரிவாக இருக்கிறது. உலகம் முழுவதும் 2426 மொழிகளில் உள்ள ஒரே நூல் பைபிள் மட்டுமே. பைபிளை பற்றிய இன்னும் ருசிகரமான தகவல்களைத் தெரிந்து கொள்வோமா!

    * ஜெர்மனியில், விஞ்ஞானி ஜான் குட்டன்பர்க் கி.பி.,1450ல் அச்சு இயந்திரம் கண்டுபிடித்தார். அதில் முதல் நூலாக பைபிளை அச்சிட்டார்.
    * கி.மு.,1500 முதல் கி.பி.,55 வரை, 40க்கும் மேற்பட்ட தீர்க்கதரிசிகளால் அந்தந்த கால நிகழ்வுகளாக எழுதிய கடவுள் வார்த்தையாக பைபிள் நம்பப்படுகிறது.
    * முதன்முதலாக எழுதப்பட்ட பைபிளின் பிரதி ஒன்று, அமெரிக்கா நியூயார்க் நகரிலுள்ள பொது இறையியல் கல்லூரியில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.
    * இத்தாலி, வாடிகன் நகரில், தோல் சுருளில் எழுதப்பட்ட புதிய ஏற்பாடு பைபிளம் உள்ளது. ஒரு சுருள் 30 அடி நீளம் கொண்டது. இதுபோல 43 தோல் சுருள்களில் அது எழுதப்பட்டது. ஆடு, மாடு, ஒட்டகம், கழுதை தோல்கள் பயன்படுத்தப்பட்டன.
    * இந்திய மொழிகளில் பைபிள் முதன் முதலாக மொழி பெயர்க்கப்பட்டது தமிழில் என்பது பெருமைக்குரிய விஷயம். ஜெர்மனி போதகர் சீகன்பால், தஞ்சாவூர் அருகே தரங்கம்பாடி வந்து தங்கினார். கி.பி.,1705ல், எபிரேய மொழியிலிருந்து, தமிழில் பைபிளை மொழி பெயர்க்க துவங்கி 1714ல் முடித்தார். அவர் எழுதிய முதல் மொழிபெயர்ப்பு பைபிள் ரோமிலுள்ள வாடிகன் நகரில் உள்ளது.


    Posted by விழியே பேசு... at 3:37 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: ஆன்மிகம், ஆன்மீகம்

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ▼  April (772)
      • படமாகிறது சாய்பாபா வரலாறு
      • சின்ன சின்ன சினிமா செய்திகள் : பிகினி அணிய தைரியம்...
      • கமலின் முத்தத்திற்கு ரூ.1.25கோடி கேட்ட தமன்னா!
      • விஜய்க்கு ஆப்பு ஆரம்பம் ; 'பொன்னியின் செல்வன் கைவி...
      • அருணாச்சல பிரதேச முதல்வர் நிலை என்ன? மாறுபட்ட கருத...
      • காஸ்டியூம் டிசைனராக மாறினார் அமலா பால்!
      • மீண்டும் மாற்றப்படுகிறது விக்ரம் பட தலைப்பு!
      • நண்பன் க்ளைமாக்ஸ்
      • பொன்னர் - சங்கருக்கும் காவலன் நிலைமைதானாம்!
      • சோனா நமீதாக்களுக்கு சூப்! - வந்தார் ஒரு கேரள அழகி
      • காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியில் விரிசலா? : ஜெயந்தி ...
      • ரஜினி, அஜீத், பாலசந்தர், கட்டபுள்ள... கோலிவுட்டை ச...
      • கருணாநிதி குடும்பத்தினர் அனைவர் பெயரையும் குற்றப்ப...
      • ராஜபக்சேவை தூக்கிலிடக் கோரி ஆர்ப்பாட்டம்
      • வடிவேலுக்கெல்லாம் பதில் சொல்வதா? கே.எஸ்.ரவிகுமார் ...
      • சைக்கோ வில்லன் ஆனார் விவேக்
      • கமல் - ஸ்ரீதேவி மீண்டும் ஜோடி..?
      • உடல் நலக்குறைவு; “ராணா” படப்பிடிப்பு ரத்து ; மீண்ட...
      • நடிகர் விக்ரம் வீடு முன்பு ஆர்ப்பாட்டம்: 100 பேர் ...
      • நடிகர் கார்த்தி நிச்சயதார்த்தம்! கிராமமே விழாக்கோல...
      • என் குடும்பத்தினர் திரைப்படத் துறையில் ஈடுபட்டால் ...
      • இலங்கை போர்க்குற்ற அறிக்கை குறித்து விவாதிக்க நாடா...
      • சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் ரஜினி!
      • கோப்புகள் அழிப்பு: அ.தி.மு.க., புகார் பின்னணி
      • நடிகை சொர்ணாவுக்கு சிறை தண்டனை உறுதி: ஐகோர்ட்
      • தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மு.க.ஸ்டாலினுக்கு முதல்...
      • 'இயக்குநர் சிகரம்' கே.பாலசந்தருக்கு 'தாதா சாகேப் ப...
      • கால்ஷீட்டுக்கு பணம் தேனிலவு செலவும் ஃப்ரீ! -வித்த...
      • சிரஞ்சீவி மீது சரமாரியாக செருப்பு வீச்சு
      • “ராணா” படப்பிடிப்பு தொடக்கம்; சூட்டிங் ஸ்பாட் புகை...
      • சிரஞ்சீவி கேட்ட உதவி கே.பாக்யராஜ் பெருமிதம்!
      • வேட்டையில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் மாதவன்
      • ராஜபக்சேவை தண்டிக்க இந்தியா முட்டுக் கட்டையாக நிற்...
      • ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார் : கலைஞர் பேட்டி - பட...
      • லிம்கா சாதனை படைத்த கன்னட சினிமா
      • வெளிநாடா, உள்ளூரா... வடிவேலு விஷயத்தில் டமால்!
      • திமுக கூட்டணியே ஆட்சியமைக்கும்!- ஹெட்லைன்ஸ் டுடே க...
      • மருத்துவமனையில் ரஜினியை சந்தித்து நலம் விசாரித்தார...
      • ரவிக்குமார் பேச்சு, நேற்றோடு போச்சு! -ராணா டைட்டி...
      • சாய்பாபா வாரிசையும் நியமிக்கவில்லை, உயிலையும் எழுத...
      • ஐ.நா. நிபுணர்கள் குழு, முட்டாள்கள்: இலங்கை அமைச்சர்
      • மே 1-அன்று ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன்! - அஜீத்...
      • ரஜினி நலம்: 'சாதாரண செக்கப்தான், அதற்குள் வதந்தியா?'
      • தீவிர சிகிச்சைப்பிரிவில் ரஜினிகாந்த் அனுமதி : பலத...
      • ரசிகர்கள் எதிர்பார்ப்பு; விஜய் பிறந்த நாளில் வேலாய...
      • வந்துவிட்டார் வில்லியம், காக்க வைப்பாரா கேட்? : நே...
      • குடும்பத்துடன் விஜயகாந்த் வெளிநாட்டுக்கு எஸ்கேப்
      • விஜயகாந்தை தாக்கி பிரசாரம் செய்ததால் ரஜினி படத்தில...
      • தரம் கெட்டு போன சிம்பு: பாவனா தாக்கு!
      • 'எக்ஸ்ட்ரா பைசா ஆகும், பரவால்லயா!!' - அனுஷ்கா
      • துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு!!
      • வருமான வரி கணக்கு விவரங்களை தெரிவிக்க ராசா மறுப்பு
      • பிஏசி கூட்டத்தில் அரங்கேறிய கூத்துகள்... ஒரு வாக்க...
      • ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனித சங்கிலி ...
      • தவறான சிகிச்சையால் கண்பார்வை இழந்த மாணவிக்கு சிகிச...
      • சாய்பாபா என்னை ஜெயிலில் சந்தித்தார்: அத்வானி
      • விஜய் பட விழா : ஜெ. பங்கேற்பதில் சிக்கல்
      • ஹாலிவுட்டை ஈர்க்க கமல் ஐடியா!
      • காதலில் தோல்வி : கிரண்!
      • சல்மானின் கட்டிப்பிடி வைத்தியம் : தேவிஸ்ரீ பிரசாத்...
      • மே 14ல் விஜய்யின் வேலாயுதம் ஆடியோ ரிலீஸ்: ஜெ., வரு...
      • ராஜபக்சேவை உலக நீதிமன்றக் கூண்டில் ஏற்றக்கோரி கி.வ...
      • நிச்சயதார்தத்தோடு நின்ற திருமணம்... 'திரும்ப வந்தா...
      • ரஜினியின் ராணா நாளை ஆரம்பம்... அதிகாரப்பூர்வ அறிவி...
      • 50 பெண்களை கற்பழித்து கொன்ற காம கொடூரனை சுட்டு பிட...
      • தமிழகத்தில் விரைவில் தமிழ் ஈழ ஆதரவு மாநாடு: கி.வீரமணி
      • மல்லையா மகனுடன் லிப் டு லிப் - அதிர வைத்த ரஜினியின...
      • சாய்பாபா மரணம் குறித்த சர்ச்சை : ஆந்திர அரசு விளக்கம்
      • 'நான் அழகிரி மகன்டா ... கருணாநிதி பேரன்ல்ல...ரூ. 1...
      • ஐ.நா.குழு அறிக்கையை குப்பை தொட்டியில் வீசுவோம்: இல...
      • இலங்கை அரசின் போர்க் குற்றம்: ஐ.நா.சபை அறிக்கை குற...
      • ஐ.நா. அறிக்கை: வெளிநாட்டு தூதுவரகளை மீண்டும் சந்தி...
      • ஜெயலலிதா பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரானாரா?: கருணா...
      • 2ஜி.. ராசா மீது குற்றச்சாட்டு, தாக்கப்படும் PMO, ப...
      • ஏப் 4-ம் தேதியே சவப்பெட்டிக்கு ஆர்டர்! சாய்பாபா மர...
      • ப.சிதம்பரம் மீது தேர்தல் ஆணையத்திடம் புகார்
      • போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர் மன்றத்தினர் :அபராதம்
      • காங்கிரசை ஜெ., தாக்கி பேசாததற்கு காரணம் என்ன?
      • ஈழம்தான் திமுகவின் குறிக்கோள் என்று கூறுவது யாரை ...
      • மங்காத்தாவில் அஜீத்துக்கு நெகடிவ் ரோல்!
      • உதயநிதி ஸ்டாலினின் ஃபார்முலா
      • எனக்கு கல்யாணமா? - பதறும் 'கவர்ச்சி' கிரண்
      • நிறைய பாய்பிரண்ட்ஸ் இருந்தா தப்பா? - 'கோ' பியா
      • அசினுக்குப் போட்டியா என்றெல்லாம் கேட்டு அசிங்கப்பட...
      • வீரப்பன் சினிமா: தயாரிப்பு-முத்துலட்சுமி; டைரக்ஷன்...
      • கற்பழிப்பு வழக்கில் பிரபலஇந்தி நடிகருக்கு ஜாமீன்!
      • விஜய்க்கு நெருக்கமான முத்தமிட்ட ஹன்சிகா
      • ஐ.நா அறிக்கை குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தைக் க...
      • தமிழக எல்லையில் நடிகர் கலாபவன் மணி ஆய்வு
      • பாபா மே 14ல் மீண்டும் வருவார்? ;புட்டபர்த்தியில் ப...
      • கைவிரித்தார் பான் கீ மூன்
      • நடிகர் கார்த்திக்கு திருமணம் முடிவானது
      • நாட்டை பற்றி கவலை... வீட்டை பிடுங்கும் நிலைமை? -ஒர...
      • ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை ஆதாரமற்றது - எட்டப்பன் ...
      • வடிவேலு வேண்டாம் ; வடிவேலுக்கு ரஜினி வைத்த ஆப்பு
      • சிங்கள ராணுவத்தின் மிருகத்தனமான தாக்குதல்-புதிய ஆத...
      • இதுவரை வெளிவராத அதி பயங்கர போர்க்குற்ற காட்சிகளை ஒ...
      • 2ஜி வழக்கில் கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜராகுவாரா? கல...
      • சத்ய சாய்பாபா பக்தர்களை கடுப்பேற்றிய நித்யானந்தா!
      • இலங்கையின் போர்க் குற்றம்-மத்திய அரசுக்கு திமுக 'த...
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.