நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் நடிகர் விஜய் ரசிகர் மன்ற தலைவர் சி.ஜெயசீலன் மன்றத்தில் இருந்து வெளியேறிவிட்டேன் என்றும், திமுக ஆதரவாக பிரச்சாரம் செய்யவிருக்கிறேன் என்றும் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஜெயசீலன் வெளியேறவில்லை. நாங்கள் தான் அவரை வெளியேற்றினோம். என்று அறிவிக்கை விடுத்துள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர்.
இது தொடர்பாக இயக்குநரும், விஜய்யின் அப்பாவும், விஜய் மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவருமான எஸ் ஏ சந்திரசேகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தலைமையில் அமைந்துள்ள அதிமுக கூட்டணியை ஆதரிப்பது என அனைத்து மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் அடங்கிய பொதுக்குழுவில் வைத்து தீர்மானம் நிறைவேற்றினோம்.
அதை ஏற்றுக் கொண்டு அனைவரும் அதிமுக கூட்டணியின் வெற்றிக்குப் பாடுபட்டு வரும் நிலையில், விஜய் ரசிகர் மன்றத்தின் மாநிலத் தலைவர் சி ஜெயசீலன், மற்றும் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ஸ்டாலின் பிரபு ஆகியோர் இயக்கத்தின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டு, களங்கம் விளைவிக்க முயன்றனர்.
எனவே இவர்களை 4.4.2011 முதல் மன்றத்தின் அனைத்துப் பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக அறிவிக்கிறோம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment