திமுக கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் சென்னை அயனாவரத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் கூட்டணிக்கட்சியினர் பங்கேற்றனர்.
குலாம் நபி ஆசாத் இந்த கூட்டத்திற்கு மிகவும் தாமதமாக வந்தார். அவரின் தாமதத்தால் கூட்டணிக்கட்சியினர் அதிக நேரம் பேசினர்.
நீண்ட நேர தாமதத்திற்கு பிறகு வந்த குலாம்நபி ஆசாத், ‘’சொன்னதை செய்தவர் கலைஞர். அதனால் 6வது முறையாக ஆட்சிக்கு வருவார்’’ என்று கூறி வாழ்த்தினார்.
பின்னர் பேசிய முதல்வர் கருணாநிதி, ‘’குலாம் நபி ஆசாத் தாமதமாக வந்தார்.
விமானத்தின் தாமதத்தால்தான் அவர் தாமதமாக வந்தார். பொதுவாகவே டெல்லி என்றாலே தாமதம்தான். டெல்லியில் இருந்து எல்லாமே தாமதமாகத்தான் வரும்.(கைத்தட்டல்)
அவரின் தாமதத்தை நான் விரும்புகிறேன். ஏனென்றால் அவர் தாமதமாக வந்ததால்தான் 5 நிமிடம் பேசுபவர்கள் எல்லாம் நிறைய பேசினார்கள். அதையெல்லாம் என்னால் கேட்க முடிந்தது.
இல்லையென்றால் 5 நிமிடம் மட்டும் பேசிவிட்டு தலைவர் பேசுவார் என்று சொலிவிட்டு அமர்ந்துவிடுவார்கள்.
இன்றுதான் முழுப்பேச்சையும் ரசிக்க முடிந்தது’’ என்று பேசினார்.
No comments:
Post a Comment