தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத கதையாக தெய்வத்திருமகன் படம் இருக்கும் என்று உணர்ச்சி பொங்க கூறுகிறார் படத்தின் நாயகன் விக்ரம்.
எப்படிபட்ட கதாபாத்திரத்தையும் ஏற்று அதில் திறம்பட நடிப்பவர் சீயான் விக்ரம். சேது படத்தில் தொடங்கி காசி, பிதாமகன், அந்நியன் என்று வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்து பெயர் பெற்றவர். தற்போது விக்ரம் தெய்வத்திருமகன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் விக்ரமுடன் அனுஷ்கா, அமலபால், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மதராசப்பட்டினம் படத்தை இயக்கிய டைரக்டர் விஜய் இப்படத்தை இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பத்ரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நேற்று நடந்தது. அதில் பேசிய நடிகர் விக்ரம், இந்தபடத்திலும் எனக்கு வித்யாசமான கதாபாத்திரம். இப்படத்தின் கதை தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத கதை. டைரக்டர் விஜய் அருமையாக இப்படத்தை இயக்கி இருக்கிறார். அதேபோல் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மிக அருமையாக படமாக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா. ஜி.வி.பிரகாஷின் இசையும் படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது. இவர்கள் தவிர படத்தில் பணியாற்றி இருக்கும் மற்ற கலைஞர்களுக்கும் இப்படம் நிச்சயம் நல்ல பெயர் வாங்கி தரும். இவ்வாறு அவர் பேசினார்.
படத்தின் சூட்டிங் வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்டதால் ஆடியோவை ஏப்ரல்-14ம் தேதியும், படத்தை மே மாதமும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கின்றனர்.
No comments:
Post a Comment