ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் விளையாடும் அணிகளில் ஒன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இந்த அணியின் உரிமையாளரும் நடிகருமான ஷாருக்கான் மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுடனும், பாதுகாவலர்களுடனும், சமீபத்தில் குடிபோதையில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதை அவர் மறுத்தார்.
ஷாருக்கானின் செயலுக்காக அதுவரை மும்பை கிரிக்கெட் சங்கம் வான்கடே மைதானத்தில் நுழைய 5 ஆண்டு தடை விதித்தது. ஷாருக்கானின் செயலுக்கு சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே கூறியதாவது:-
மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுடன் ஷாருக்கான் நடந்துகொண்ட விதம் அநாகரீகமானது. இதுமாதிரிதான் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்க விமான நிலையத்தில் நடந்து கொண்டார்.
ஷாருக்கான் மாதிரி சாதாரன குடிமகன் அப்படி செய்தால் மும்பை கிரிக்கெட் சங்கமும், கிரிக்கெட் வாரியமும் எப்படி நடந்து கொள்ளும் என்பதே எனது கேள்வி.
மும்பை கிரிக்கெட் சங்கம் ஷாருக்கானுக்கு விதித்த 5 ஆண்டு தடையை ரத்து செய்து விடலாம். ஏனென்றால் அவர் டெல்லியில் செல்வாக்கு பெற்றவர். டெல்லியில் உள்ள காங்கிரஸ் முக்கிய பிரமுகர்களுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. காங்கிரசின் தயவில் அவரால் எதையும் சாதிக்க முடியும். அதோடு இந்திய கிரிக்கெட் வாரியத்திடமும் ஷாருக்கானுக்கு செல்வாக்கு உள்ளது.
இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
No comments:
Post a Comment