திருமணம்
செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை கொலை செய்ததாக பதிவான
வழக்கில் கைதான, நடிகைக்கு நிபந்தனை
அடிப்படையில் ஜாமீன் வழங்கி சென்னை
ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தயாரிப்பாளர்
கொலை
பாளையங்கோட்டையை
சேர்ந்தவர் ரொனால்டு பீட்டர் பிரிண்சோ. சினிமா
தயாரிப்பாளரான இவர், சென்னையில் கடந்த
ஜனவரி மாதம் முதல் காணாமல்
போனார். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார், வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், இந்த வழக்கு சென்னை
மதுரவாயல் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த போலீசார்,
ரொனால்டு பீட்டர் பிரண்சோ கொலை
செய்யப்பட்டதை கண்டு பிடித்தனர். ரொனால்டு
பீட்டர் பிரண்சோவுடன், மனைவியாக வாழ்ந்து வந்த நடிகை சுருதி
என்ற சந்திரலேகா, உமாசந்திரன், ஜான் பிரின்சன் உட்பட
பலர் சேர்ந்து கடந்த ஜனவரி 18-ந்தேதி
இந்த கொலையை செய்துள்ளதாக வழக்குப்பதிவு
செய்தனர்.
மனைவி போல்...
இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட சுருதி
என்ற சந்திரலேகாவை பல இடங்களில் போலீசார்
தேடியும் கைது செய்ய முடியவில்லை.
கடைசியாக கடந்த செப்டம்பர் மாதம்
சுருதியை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து,
இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க
கோரி சென்னை ஐகோர்ட்டில், சுருதி
என்ற சந்திரலேகா மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
ரொனால்டு
பீட்டர் பிரண்சோவுடன், திருமணம் செய்யாமல் மனைவியாக வாழ்ந்து வந்தேன். அவரை கொலை செய்த
வழக்கில் 5-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட
ஹானஸ்ட்ராஜ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில்
இந்த வழக்கில் என் மீது போலீசார்
குற்றம் சுமத்தியுள்ளனர். கொலை செய்யப்பட்ட ரொனால்டு
பீட்டர் பிரிண்சோ, உமாசந்திரன், ஜான்பிரிண்சன், ஹானஸ்ட்ராஜ் ஆகியோர் ‘ஆன்-லைன்’ தொழிலில்
என்னை மேலாளராக பணி செய்ய கட்டாயப்படுத்தினார்கள்.
ஆபாச படம்
பின்னர்,
இளம்பெண்களை வைத்து அவர்கள் ஆபாசப்படங்களை
தயாரித்தார்கள். அப்போது, என்னையும் ஆபாசப்படங்களில் நடிக்கவேண்டும் என்றும் பலருடன் ஒரே
நேரத்தில் உறவுக் கொள்ளவேண்டும் என்றும்
வற்புறுத்தினார்கள்.
இதற்கு
நான் சம்மதிக்காததால், அவர்கள் எனக்கு கொலை
மிரட்டல் விடுத்தார்கள். இந்த நிலையில், ரொனால்டு
பீட்டர் பிரிண்சோவிடம் இருந்து ஆன்-லைன்
தொழிலை அபகரிக்க, அவரை உமாசந்திரன், ஜான்
பிரிண்சன் மற்றும் பலர் கொலை
செய்துள்ளது எனக்கு தெரியவந்தது. ஆனால்,
என்னையும் இந்த வழக்கில் போலீசார்
கைது செய்துள்ளனர்.
நான் ஒரு அப்பாவி. ஆனால்,
இந்த கொலை வழக்கில் என்னையும்
குற்றவாளியாக போலீசார் சேர்த்துள்ளனர். எனவே, எனக்கு ஜாமீன்
வழங்கவேண்டும்.
இவ்வாறு
அதில் கூறியிருந்தார்.
நிபந்தனை
இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு
விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில்
வக்கீல் பி.ஆறுமுகம் ஆஜராகி
வாதிட்டார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில்
கூறியிருப்பதாவது:-
மனுதாரர்
கடந்த செப்டம்பர் 5-ந்தேதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை வழக்கை விசாரிக்கும்
மதுரவாயல் போலீசார், இதுவரை வழக்கின் குற்றப்பத்திரிகையை
கோர்ட்டில் தாக்கல் செய்யவில்லை. எனவே,
மனுதாரருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்குகிறேன். அவர்
தினமும் காலை 10 மணிக்கும், மாலை
6.30 மணிக்கும் மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முன்பு
ஆஜராகி 4 வாரத்துக்கு கையெழுத்திட வேண்டும். மேலும், மனுதாரர் தலைமறைவாகக்கூடாது.
சாட்சிகளையும் கலைக்கக் கூடாது.
இவ்வாறு
நீதிபதி கூறியுள்ளார்.

No comments:
Post a Comment