இந்தியா,
பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த
அமைக்கப்பட்டிருந்த மின் விளக்குகள் அமெரிக்க
விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
இரண்டு
நாடுகளின் எல்லைகளைப் பிரிக்க, கோடுகள் இருப்பது எதார்த்தமான
ஒன்று. இரு நாட்டினருக்கும் பிரச்சனை
ஏற்படா வண்ணம், வீரர்கள் எல்லைப்
பகுதியில் எப்போதும் தயார் நிலையில், தீவிர
கண்காணிப்பில் இருப்பார்கள்.
ஆனால் சமீபத்தில், அமெரிக்க விஞ்ஞானிகள், நாசா விண்வெளிக் கழகத்திற்கு
ஒரு புகைப்படும் எடுத்து அனுப்பியுள்ளனர். அதில்தான்
அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
ஏனென்றால்,
புகைப் படங்களைப் பார்த்ததும் விஞ்ஞானிகளுக்கு அவற்றில் பளிச்சென்று நீளமான ஆரஞ்சு நிறக்
கோடு ஒன்று தெரிந்தது. அது,
கோட்டைக் குறித்து தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டபோது
தான், அது இந்தியா, பாகிஸ்தான்
எல்லைப் பகுதி என்று தெரியவந்துள்ளது.
இந்தியா
– பாகிஸ்தான் நாடுகளின் எல்லையில் பயங்கரவாதிகளின் ஊடுருவல், ஆயுதங்கள், வெடிபொருட்கள் கடத்தல் போன்ற சட்டவிரோதப்
பிரச்னைகள் நடைபெறாமல் இருக்கவும், எல்லையைப் பகுதியைப் பலப்படுத்தவும், வரிசையாக மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.
இதனால்,
பயங்கரவாதிகள் ஊடுருவுவதை தடுக்கவும், மேலும் தக்க சமயத்தில்
பதிலடி கொடுக்கவும் முடியும் வண்ணம், எல்லையில் இது
போன்று அமைக்கப்பட்டுள்ளது. இது பஞ்சாப், ஜம்மு
தேசிய எல்லைப் பகுதி மற்றும்
குஜராத்துடன் சுமார் 1,861 கிலோமீட்டர்கள் வரை உள்ளது.
இன்றைய சூடான செய்திகள்...
No comments:
Post a Comment