கோலிவுட்
நடிகர்கள் விஜய், விக்ரம், சூர்யா,
கார்த்தி, விஷாலின் படங்கள் மற்ற மொழிகளில்
டப்பிங் செய்யப்பட்டு ஹிட் கலெக்ஷன் கொடுத்திருக்கிறது.
கேரளாவில் நேரடி படமாகவே ரிலீஸ்
செய்து கலெக்ஷன் பார்க்கிறார்கள்.
இதைப்பார்த்த
சில கோலிவுட் நடிகர்கள் டோலிவுட் சென்றால் நல்ல வரவேற்பு இருக்கும்
என்று எண்ணி நேரடியாக அம்மொழியில்
நடிக்கச் சென்று தாக்கு பிடிக்க
முடியாமல் திரும்பி கோலிவுட்டுக்கே வந்துவிட்டார்கள். ஆர்யா, ஸ்ரீகாந்த், ஷாம்
போன்றவர்கள் இப்படி சூடுபட்டிருக்கிறார்கள். சூர்யா, விஷால்.
கார்த்தி படங்கள் தற்போது டோலிவுட்டில்
ஃபுல்லா கல்லா கட்டிக்கொண்டிருக்கிறது.
இதை கணக்குபோட்டு பார்த்த
மூவரும் நேரடி தெலுங்கு படங்களில்
களமிறங்க முடிவு செய்திருக்கின்றனர். முதல்பிரவேசமாக
கார்த்தி, நாகார்ஜுனாவுடன் ஒரு தெலுங்கு படத்தில்
நடிக்கிறார். இதையடுத்து சூர்யா களத்தில் குதிக்க
முடிவு செய்திருக்கிறார். ஆனால் இந்த பிரவேசம்
அதிரடியாக இருக்க வேண்டும் என்பதில்
தெளிவாக இருக்கிறார்.
இதற்காக
மாஸ்டர் பிளான் வகுத்திருக்கிறாராம். டோலிவுட் பிரபல
இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கும் படம் மூலம் அவர்
என்ட்ரி கொடுப்பதற்கான ஏற்பாடுகள் ரகசியமாக நடந்து வருகிறது என்கிறது
சூர்யா தரப்பு. தொடர்ந்து தனது
படங்களை தானே தயாரிக்கும் சூர்யா,
தெலுங்கு பட தயாரிப்பு, வினியோக
பணியிலும் ஈடுபட முடிவு செய்துள்ளாராம்.
இன்றைய சூடான செய்திகள்...
No comments:
Post a Comment