கடந்த 13-ம் தேதி நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 4 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை.
கடந்த 13-ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரேகட்டமாக சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் வரலாறு காணாத அளவுக்கு அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் நூற்றுக்நூறு எழுத்தறிவு பெற்ற மாவ்டடமான குமரியில் 4 ல்டசம் பேர் வாக்களிக்கவேயில்லை.
குமரி மாவட்டத்தில் மொத்தம் 12 லட்சத்து 96 ஆயிரத்து 424 வாக்கள்ர்கள் உள்ளனர். இதில் 4 லட்சத்து 2 ஆயிரத்து 804 பேர் வாக்களிக்கவில்லை.
இத்தனை பேர் வாக்களிக்காததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. குமரி மாவட்டத்தில் மீன்பிடி தொழிலாளர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். இதில் ஏராளமானோர் கேரளா, குஜராத் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளிலும், வளைகுடா நாடுகளிலும் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் விடுமுறையின்போது மட்டும் தான் சொந்த ஊருக்கு வருகின்றனர்.
இதுதவிர ஏராளமானவர்கள் கேரள மாநிலத்தில் கட்டுமானப் பணி செய்து வருகின்றனர். மேலும் பலர் வெளிநாடுகளில் வேலை பார்க்கின்றனர். இவர்களில் பலர் வாக்களிக்க வரவில்லை. அதனால் தான் வாக்குப்பதிவு குறைந்துள்ளது.
இது குறித்து குமரி மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ கூறுகையில்,
கடந்த சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இந்த தேர்தலில் குமரி மாவட்டத்தில் அதிக அளவு வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 63.7 சதவீத வாக்குகளும், 2009-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 64.50 சதவீத வாக்குகளும் பதிவாகின. ஆனால் இந்த தேர்தலில் 68.93 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என்றார்.
இன்றைய செய்திகள்...
- 2 ஜி வழக்கில் கருணாநிதி, சிதம்பரத்தையும் சேர்க்க ச...
- பணம்..பணம்-மதுரை மேற்கு தொகுதியில் மத்திய உளவுப் ப...
- சோனியாவுடன் ப.சி, வாசன் சந்திப்பு-தங்கபாலுவை நீக்க...
- திமுக கூட்டணிக்கு எதிராக தேர்தல் ஆணைய நடவடிக்கைகள்...
- தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதாவை தாக்கி பேசவில்லை: ...
- பறிமுதல் செய்யப்பட்ட 49 கோடி பணத்தை யாரும் கேட்கவி...
- என் கணவர் அரசியலில் இருக்கிறார் -நடிகை நளினி
- 'வெள்ளை மாளிகையை ஆளத் தகுதியான நீ தலைமை செயலகத்துக...
- நான் அப்படியா சொன்னேன்? த்ரிஷா அதிர்ச்சி!
- தோற்றால் முதல் பலி ஹீரோயின்கள்தான்! - அனுஷ்காவின் ...
- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கைது
- கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு 'நோ அப்பாயின்ட்மெண்ட...
- கொலைகார அரசையே விசாரிக்கச் சொல்வதா? சீமான்
- இலங்கை தூதரகம் முன் தங்கபாலு ஆர்ப்பாட்டம்: தங்கபால...
- 19 பேர் நீக்கம்: அழகிரி எம்.பி. கோரிக்கை
- வருங்கால தலைமுறையினர் வாழ வழி இல்லாமல் போய்விட்டது...
- குமரி மாவட்டத்தில் 4 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை
- ஜெகன்மோகன் பெயரில் 12 சுயேட்சைகள்: காங்கிரசின் மு...
- ஊழலுக்கு எதிராக அமைதியா? என்கிறார் ராகுல்
- எலெக்ஷன் ஓவர் மாப்பு... இனி யாருக்கொல்லாம் ஆப்பு? ...
- உலக கோப்பையை இந்தியா வென்றதற்காக அம்மனுக்கு 202 தே...
- தலைநகரம் யாருக்கு? : ஓட்டுப்பதிவு உண்மைகள்

No comments:
Post a Comment