போஸ்டர்கள் மற்றும் சுவர் விளம்பரங்களுக்கு தனிச் சிறப்பு பெற்ற ஊர் மதுரை. கல்யாணம், காதுகுத்து, ஜல்லிக்கட்டு என எல்லா நிகழ்வுகளுக்கும் அசத்தலாக போஸ்டர்கள், ப்ளெக்ஸ் பேனர்கள் வைப்பதில் இவர்களுக்கு நிகரில்லை.
சாதாரண நிகழ்வுகளுக்கே இப்படி என்றால், ரஜினி ரசிகர்கள் தங்கள் தலைவருக்கு எப்படியெல்லாம் போஸ்டர் அடிப்பார்கள் என்பது கற்பனைக்கும் அப்பாற்பட்டது.
இதோ அந்த போஸ்டர்களில் ஒரு வாசகம்: 'வெள்ளை மாளிகையைக் கூட ஆளத் தகுதியான தலைவா, நீ தலைமை செயலகத்துக்கு வரத் தயங்குவது ஏன்?'
-இந்த வாசகங்களுடன் 20 அடி நீளத்துக்கு பிரம்மாண்டமான ரஜினி போஸ்டர்கள் மதுரையெங்கும் நேற்றும் இன்றும் களைகட்டின. இதனால் யார் பரபரப்படைந்தார்களோ இல்லையோ, அரசியல்வாதிகள் கொஞ்சம் ஆடித்தான் போனார்கள். ரஜினி திடீரென்று ஏதாவது அறிக்கை விட்டுவிட்டாரா என்று ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டனர்.
இந்தப் போஸ்டர்களை அடித்தவர்கள் மதுரை நகரைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள்தான். "சமீபத்திய அரசியல் நிகழ்வுகளைப் பார்த்தும், அரசியல் கட்சிகளின் லட்சணத்தைப் பார்த்தும் வெறுத்துப் போய்தான் நாங்கள் இந்த போஸ்டரை அடித்தோம். ரஜினி சார் நிச்சயம் இந்த தமிழக மக்களுக்காக சில திட்டங்களை வைத்திருக்கிறார். அவற்றை வெளிப்படுத்த இதுதான் சரியான தருணம்," என்றார் ஆரப்பாளையத்தைச் சேர்ந்த ரசிகரான சங்கரன்.
"பொறுமையாக இருந்தது போதும். இனியாவது ரஜினி அரசியலில் இறங்கி இப்போதுள்ள ஊழல்வாதிகளையும், ஆணவக்காரர்களையும் விரட்டியடிக்க வேண்டும்", என்றார் இன்னொரு ரசிகர்.
தேர்தல் கமிஷன் விதிகள் நடைமுறையில் உள்ள இந்த சூழலில் இதுபோன்ற போஸ்டர்கள் அடிப்பது விதிகளை மீறிய செயல் என தேர்தல் ஆணையத்திடம் சிலர் புகார் கூற, உடனடியாக இது குறித்து விசாரணையில் இறங்கியது தேர்தல் ஆணையம். இதில் போஸ்டர் அடித்து ஒட்டிய ரஜினி ரசிகர் ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இன்றைய செய்திகள்...
- 2 ஜி வழக்கில் கருணாநிதி, சிதம்பரத்தையும் சேர்க்க ச...
- பணம்..பணம்-மதுரை மேற்கு தொகுதியில் மத்திய உளவுப் ப...
- சோனியாவுடன் ப.சி, வாசன் சந்திப்பு-தங்கபாலுவை நீக்க...
- திமுக கூட்டணிக்கு எதிராக தேர்தல் ஆணைய நடவடிக்கைகள்...
- தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதாவை தாக்கி பேசவில்லை: ...
- பறிமுதல் செய்யப்பட்ட 49 கோடி பணத்தை யாரும் கேட்கவி...
- என் கணவர் அரசியலில் இருக்கிறார் -நடிகை நளினி
- 'வெள்ளை மாளிகையை ஆளத் தகுதியான நீ தலைமை செயலகத்துக...
- நான் அப்படியா சொன்னேன்? த்ரிஷா அதிர்ச்சி!
- தோற்றால் முதல் பலி ஹீரோயின்கள்தான்! - அனுஷ்காவின் ...
- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கைது
- கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு 'நோ அப்பாயின்ட்மெண்ட...
- கொலைகார அரசையே விசாரிக்கச் சொல்வதா? சீமான்
- இலங்கை தூதரகம் முன் தங்கபாலு ஆர்ப்பாட்டம்: தங்கபால...
- 19 பேர் நீக்கம்: அழகிரி எம்.பி. கோரிக்கை
- வருங்கால தலைமுறையினர் வாழ வழி இல்லாமல் போய்விட்டது...
- குமரி மாவட்டத்தில் 4 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை
- ஜெகன்மோகன் பெயரில் 12 சுயேட்சைகள்: காங்கிரசின் மு...
- ஊழலுக்கு எதிராக அமைதியா? என்கிறார் ராகுல்
- எலெக்ஷன் ஓவர் மாப்பு... இனி யாருக்கொல்லாம் ஆப்பு? ...
- உலக கோப்பையை இந்தியா வென்றதற்காக அம்மனுக்கு 202 தே...
- தலைநகரம் யாருக்கு? : ஓட்டுப்பதிவு உண்மைகள்

No comments:
Post a Comment