2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடுகள் வழக்கில் முதல்வர் கருணாநிதி, மத்திய உள்துறை அமைச்சர் ப சிதம்பரம் ஆகியோரையும் குற்றவாளிகளாகச் சேர்கத்க வேண்டும் என ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி தனியாக தாக்கல் செய்த புகாரை சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையுடன் இணைக்க முடியுமா என்பது குறித்து பதிலளிக்குமாறு சிபிஐயை சிறப்பு நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
சிபிஐயின் முதல் தகவலறிக்கையுடன் தனது புகார் மனு இணைக்கப்பட்டால் தனக்கு ஆட்சேபணை இல்லை என சுப்பிரமணிய சாமி நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதையடுத்து இதுகுறித்து மே 4-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி சிபிஐக்கு உத்தரவிட்டார்.
முன்னதாக சிபிஐயின் எஃப்ஐஆருடன் உங்களது புகாரை இணைக்க விருப்பமா என சாமியிடம் நீதிமன்றம் கேட்டது. 'அப்படி இணைத்தால் தனக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை. ஆனால் தன்னை அரசு வழக்கறிஞராக நியமிக்க வேண்டும்', என சுவாமி தெரிவித்தார்.
இதுகுறித்து பதிலளிக்க தங்களுக்கு 2 வாரம் அவகாசம் வேண்டும் என சிபிஐ தரப்பில் ஆஜரான ஏ.கே.சிங் தெரிவித்தார்.
இந்த வழக்கில் சிபிஐக்கும், உச்சநீதிமன்றத்தால் சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ள யு.யு.லலித்துக்கும் உதவிசெய்யத் தயாராக உள்ளதாக சுவாமி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
கருணாநிதியும் குற்றவாளியாக சேர்க்கப்பட வேண்டும்!
முன்னதாக, 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தமிழக முதல்வர் கருணாநிதியும் ஒரு குற்றவாளியாகச் சேர்க்கப்பட வேண்டும் என கடந்த மார்ச் 28-ம் தேதி நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் இந்த வழக்கில் சேர்க்க அனுமதி வழங்கக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியிருப்பதாக சிபிஐ நீதிபதி ஓ.பி.சைனியிடம் சாமி தெரிவித்திருந்தார்.
இன்றைய செய்திகள்...
- 2 ஜி வழக்கில் கருணாநிதி, சிதம்பரத்தையும் சேர்க்க ச...
- பணம்..பணம்-மதுரை மேற்கு தொகுதியில் மத்திய உளவுப் ப...
- சோனியாவுடன் ப.சி, வாசன் சந்திப்பு-தங்கபாலுவை நீக்க...
- திமுக கூட்டணிக்கு எதிராக தேர்தல் ஆணைய நடவடிக்கைகள்...
- தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதாவை தாக்கி பேசவில்லை: ...
- பறிமுதல் செய்யப்பட்ட 49 கோடி பணத்தை யாரும் கேட்கவி...
- என் கணவர் அரசியலில் இருக்கிறார் -நடிகை நளினி
- 'வெள்ளை மாளிகையை ஆளத் தகுதியான நீ தலைமை செயலகத்துக...
- நான் அப்படியா சொன்னேன்? த்ரிஷா அதிர்ச்சி!
- தோற்றால் முதல் பலி ஹீரோயின்கள்தான்! - அனுஷ்காவின் ...
- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கைது
- கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு 'நோ அப்பாயின்ட்மெண்ட...
- கொலைகார அரசையே விசாரிக்கச் சொல்வதா? சீமான்
- இலங்கை தூதரகம் முன் தங்கபாலு ஆர்ப்பாட்டம்: தங்கபால...
- 19 பேர் நீக்கம்: அழகிரி எம்.பி. கோரிக்கை
- வருங்கால தலைமுறையினர் வாழ வழி இல்லாமல் போய்விட்டது...
- குமரி மாவட்டத்தில் 4 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை
- ஜெகன்மோகன் பெயரில் 12 சுயேட்சைகள்: காங்கிரசின் மு...
- ஊழலுக்கு எதிராக அமைதியா? என்கிறார் ராகுல்
- எலெக்ஷன் ஓவர் மாப்பு... இனி யாருக்கொல்லாம் ஆப்பு? ...
- உலக கோப்பையை இந்தியா வென்றதற்காக அம்மனுக்கு 202 தே...
- தலைநகரம் யாருக்கு? : ஓட்டுப்பதிவு உண்மைகள்

No comments:
Post a Comment