சட்டசபை தேர்தலையொட்டி நடைமுறையில் இருந்த தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் சிலவற்றை, தேர்தல் கமிஷன் தளர்த்தி உள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் முடிவடைந்துள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இதன்படி, ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட அரசு பணிகளுக்கு டெண்டர்கள் விடலாம். இருந்தாலும், டெண்டர்களை அனுமதிக்கும் முன்னர் தேர்தல் கமிஷனின் அனுமதி பெற வேண்டும். இறுதி செய்யப்பட்ட பணிகளை துவக்கலாம் மற்றும் பணிக்கான ஆர்டர்களை வழங்கலாம். உள்ளாட்சி அமைப்புகளின் கூட்டங்களை நடத்தி, முடிவு எடுக்கலாம்.
அமைச்சர் தங்கள் பணி நிமித்தம் வாகனங்களை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடும் தளர்த்தப்படுகிறது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள, "ஸ்ட்ராங் ரூம்' வளாகத்திற்கு வெளியே புறபாதுகாப்பு எல்லை வரை, அவர்கள் சுழல் விளக்கு பொருத்தப்பட்ட அரசு வாகனத்தில் செல்லலாம்.
"
ஸ்ட்ராங் ரூம்' வளாகத்திலிருந்து ஒரு கிலோமீட்டருக்குள் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தக் கூடாது. போலீசார், வருவாய் துறையினர் மற்றும் தேர்தல் அலுவலர்களுடன் மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் அரசு செயலர்கள் கலந்தாய்வு நடத்தக் கூடாது. அலுவலர்களும் தேர்தல் கமிஷனின் முன் அனுமதியின்றி, அமைச்சர்களின் கலந்தாய்வு கூட்டங்களில் பங்கேற்கக் கூடாது.
அடுத்த மாதம் 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை அரசு விருந்தினர் மாளிகைகள், தேர்தல் பார்வையாளர்களுக்கு ஒதுக்கப்பட உள்ளன. மற்ற நாட்களில் இவற்றை தங்கள் துறைப் பணிகளுக்காக அமைச்சர்கள் பயன்படுத்தலாம். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டப் பணிகள் தொடரலாம். எம்.எல்.ஏ.,க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை வழங்குவதில் உள்ள கட்டுப்பாடு மட்டும் தொடரும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய செய்திகள்....
- தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்வு : தமிழக தலைமை தே...
- இலங்கை அரசை சர்வதேச குற்றவாளி கூண்டில் நிறுத்த கோர...
- லெஸ்பியன், விலைமாதாக நடிக்க ஆசை! - பிரபல நடிகை
- உதட்டோடு உதடு முத்தம்! - அசின் ஆவேசம்
- எனக்கு பாலிவுட்டில் எதிரியே கிடையாது: நடிகை சோனம் ...
- பிரகாஷ் ராஜ் முதல் மனைவி மீண்டும் நடிக்கிறார்!!
- தாத்தா வழியில் அரசியலில் நுழைந்த 'குத்து’ ரம்யா
- டயானாவை பின்னுக்கு தள்ளும் கேட்
- தேர்தலுக்கு பிறகும் லாட்ஜ்களில் தீவிர கண்காணிப்பு
- ஜெயலலிதா பங்கேற்கும் விஜய் பட பாடல் வெளியீட்டு விழ...
- ஜெயிக்க போவது யாரு?-பக்திமான்களாகிவிட்ட கரை வேட்டி...
- தெய்வத் திருமகன் பெயரை மாற்ற வேண்டும்! - தேவர் குல...
- நான் ஒரு அறிக்கை விட்டால் தமிழ்நாடே பற்றி எரியும்!...
- அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததால் விஜய் வீடு மீது த...
- ஸ்ரீசத்ய சாய்பாபா ஜீவசமாதி?
- யாரும் தீக்குளித்து பலியாக வேண்டாம்; டைரக்டர் சீமா...
- பெண் போலீசுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த உயர் அதிக...
- ஓட்டு எண்ணும் மையங்களில் கட்சியினர் தீவிர கண்காணிப...
- தலைநகரம் யாருக்கு? : ஓட்டுப்பதிவு உண்மைகள் -பகுதி ...
- அதிமுகவுக்கு பெரிய வெற்றி கிட்டாது! - சுப்பிரமணிய ...
- '49 ஓ’ ரகசியம் காக்கப்படுமா?
- இலங்கைக்கு சர்வதேச அளவில் எந்த உதவியும் இந்தியா செ...
- தேர்தலில் எதிராக செயல்பட்ட திமுகவினர் கட்சியில் இர...
- தமிழக சட்டசபை தேர்தல் :11 சதவீத ஓட்டு அதிகம்
- "மீனவர்களுக்கு எதிராக வன்முறையை பயன்படுத்தக்கூடாது...
- தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமாருடன் அதிமுக நிர்...

No comments:
Post a Comment