இன்டர்நெட்டில் தனது சகோதரியின் ஆபாச படத்தையும் அவர் குறித்து தவறான தகவல்களையும் வெளியிட்ட தங்கை கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தைச் சேர்ந்தவர் ஜான்சிராணி (26). இவர் சென்னை மைலாப்பூரில் வசித்து வந்தார். இவருக்கும், இவரது அக்காவான சமந்தாவுக்கும் (35) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இடையே சொத்து தகராறு இருந்து வந்தது.
இந் நிலையில் தனது அக்காவின் படத்தை கிராபிக்ஸ் மூலம் ஆபாச படமாக்கி அதை இன்டர்நெட்டில் ஒரு ஆபாச இணையத் தளத்தில் கடந்த 2009ம் ஆண்டு வெளியிட்டார். மேலும் அவர் குறித்து அதில் மோசமான விவரங்களும் இருந்தன.
இது குறித்து அஞ்சுகிராமம் போலீசில் சமந்தா புகார் செய்தார்.
ஆனால் ஓராண்டாகியும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து சமந்தா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதன் பிறகு சைபர் கிரைம் போலீசார் வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது.
விசாரணையில் மைலாப்பூரில் வசித்து வந்த ஜான்சி ராணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரித்தபோது உண்மையை ஒப்புக் கொண்டார். சொத்து தகராறில் அக்காள் மீதுள்ள கோபத்தில் இப்படி செய்ததாகத் தெரிவித்தார்.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜான்சி ராணி சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கும் சமந்தாவுக்கும் இடையே ஏற்பட்ட சொத்து தகராறு தொடர்பாக அஞ்சுகிராமம் போலீசிலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய செய்திகள்...
- தலைவர்கள் தொகுதியில் தடுமாறிய சதவீதங்கள்
- சினிமாவின் மோசமான காலகட்டம் : உண்மையை சொன்ன வைரமுத...
- சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆனார் பிரகாஷ்ராஜ...
- லோக்பால் குழு கூட்டம்-சொத்து கணக்கு வெளியிட்ட ஹசார...
- சிங்கள ராணுவத்தால் தலை, கை, கால், வெட்டி கொல்லப்பட...
- வெற்றி கிடைக்குமா: தி.மு.க., திடீர் சர்வே
- நந்திதா தாஸ்க்கு செவாலியர் விருது
- இலங்கை அரசை புகழ்ந்து பேசிய நடிகை ஸ்ரேயாவுக்கு கட...
- தமிழகக் காவல் துறையின் லட்சணம் இது தான்-ஜெயலலிதா
- ரூ.4 கோடி தருவதாக கூறியும் “வீட்டு விருந்து நிகழ்ச...
- அவருக்கு ஜோடியா ?... கலக்கத்தில் த்ரிஷா
- இன்டர்நெட்டில் சகோதரியின் ஆபாச படத்தை வெளியிட்ட தங...
- உதயநிதி ஸ்டாலினின் விழாவை ரஜினி புறக்கணித்தார் : வ...
- வாய்ப்பு கேட்ட வடிவேலு? பதில் சொல்லாத இயக்குனர்!
- கலைஞர் கேட்ட கேள்வியால் பொன்னர் சங்கரை புறக்கணித்த...
- தங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார் : ஈ.வி....
- காவல்துறை ஏன் கைகட்டிக் வேடிக்கை பார்க்கிறது என்ப...
- கலைஞர் புகார் : நெடுமாறன் கண்டனம்
- கறுப்பு பணம் வைத்திருப்பவர்களின் பெயர்களை வெளியிட ...
- தங்கபாலு அதிரடி : எஸ்.வி.சேகர் பதிலடி
- சினிமாவாகிறது நடிகை காஞ்சனாவின் வாழ்க்கை வரலாறு!
- தங்கபாலு - யுவராஜா யுத்தம்
- கொளத்தூர் : நூலிழையில் தான் ஸ்டாலின் வெற்றி - தோல்...
- தேர்தல் ஆணையம் மீது கலைஞர் மீண்டும் புகார்
- வடிவேலு, குஷ்பூ பேசும் அளவிற்கு நிலைமை மோசமாகியுள...
- ரஜினிகாந்த் வாக்குச் சாவடியில் மறு ஓட்டுப் பதிவு ந...

No comments:
Post a Comment