தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 13-ந்தேதி முடிவடைந்தது. அடுத்த மாதம் 13-ந் தேதி ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன. மின்னணு எந்திர வாக்குப்பதிவு என்பதால் 13-ந்தேதி மாலைக்குள் அனைத்து முடிவுகளும் வெளியாகி விடும்.
என்றாலும் அமைச்சரவை பதவி ஏற்பு, சட்டசபை கூடுதல், எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு ஆகியவற்றுக்கான கால அவகாசம் மிகவும் குறைவாகவே உள்ளது. தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை அறிய இன்னும் 23 நாட்கள் காத்திருக்க வேண்டியது இருக்கிறது.
ஆனால் அமைச்சரவை பதவி ஏற்பு, சட்டசபையை கூட்டி எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பது போன்ற அரசியல் நடவடிக்கைகளுக்கு கால அவகாசம் இல்லை. இதனால் அரசியல் கட்சிகள் தவிப்பில் உள்ளன.
2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு 17-5-2006 அன்று காலை 9.30 மணிக்கு 13-வது சட்டசபை கூடியது. அதில் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர். அரசியல் சட்ட விதிகளின்படி தமிழகத்தின் 14-வது சட்டசபை 17-5-2011 காலை 9.30 மணிக்குள் கூடி புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும்.
அதற்கு தற்காலிக சபாநாயகர் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும். முன்னதாக தேர்தலில் பெரும்பான்மையாக வெற்றி பெற்றவர்களின் அமைச்சரவை பதவி ஏற்க வேண்டும். எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பதற்கான தகவல்கள் முறைப்படி அனுப்பப்பட்டு அனைவரும் வரவேண்டும்.
யாராவது பதவி ஏற்க வரமுடியாத சூழ்நிலை இருந்தால் அவரது பதவியை முடக்கி வைப்பது குறித்து கவர்னர் முடிவு எடுக்கலாம். தேர்தல் முடிவு எந்த அணிக்கு சாதகமாக இருக்கும் என்ற மர்ம முடிச்சு அவிழ்க்கப்பட நீண்ட நாள் காத்திருக்க வேண்டியிருக்கிறது.
எனவே முக்கிய கட்சிகளும், போட்டியிட்ட வேட்பாளர்களும், தேர்தலில் பணிபுரிந்த தொண்டர்களும் “திக்... திக்.. மன நிலையிலேயே உள்ளனர். முடிவை அறிய ஒரு மாத அவகாசம் கொடுத்த தேர்தல் ஆணையம், அமைச்சரவை, சட்டசபை கூட்டம், எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு போன்ற முக்கிய அரசியல் நடவடிக்கைகளுக்கு கால அவகாசம் கொடுக்கவில்லை.
இது குறித்தும் தேர்தல் ஆணையம் முன்னதாகவே அரசியல் நிபுணர்களிடம் ஆலோசித்து தேர்தல் மற்றும் ஓட்டு எண்ணும் தேதியை முடிவு செய்திருக்க வேண்டும் என்பது அரசியல் பிரமுகர்களின் கருத்தாக உள்ளது.
- பாடகர் - பாடலாசிரியர்களை கவுரவித்த வசனகர்த்தா!
- படத்தை போட்ட சோப் கம்பெனியிடம் ரூ.1 கோடி கேட்கிறார...
- தேர்தலில் பணம் வினியோகித்ததால் வாக்காளர் பட்டியலில...
- பொன்னர் சங்கர் ரீ-சூட்டிங்!
- நார்வே சென்ற இயக்குனர் பட்டாளம்!
- ஓட்டு எண்ணும் மையங்களில் அடியாட்கள் நுழைய வாய்ப்பு...
- ஜெ. புதிய மனு : நாளை விசாரணை
- நண்பனால் பகைவன் ஆகும் ஹீரோக்கள்
- மும்பை கடல் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் மர்ம கப்...
- குவாட்டர் அடிச்சு அடிச்சு இப்ப 'நைன்ட்டி' இல்லாம த...
- விஜய் கல்லெறி படாமல் தப்பியது எப்படி ?
- மே 13-ல் ஓட்டு எண்ணிக்கை: 17-ந்தேதி காலை 9.30 மணிக...
- பேரணியா? இலங்கைக்கு ஐநா எச்சரிக்கை!
- பணம் வாங்கிக்கொண்டு அதிமுக வேட்பாளர்களை சசிகலா தேர...
- தங்கபாலு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டியது சோனியாவின் வ...
- ஜூனில் விவாகரத்து... சொத்துக்களை ரம்லத்துக்கு எழுத...
- 'விஜய்' வீடு மீது தாக்குதல்!!
- மே 13 தேர்தல் முடிவு...மே 14 ப்ளஸ் டூ தேர்வு முடிவ...
- தமிழக சட்டசபை தேர்தல் நாள் ஜாதகம் : எப்படியெல்லாம்...
- இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்த இன்னொரு பச்சை தம...
- கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லியுடன் சுற்றும் பிரபல...
- ஹசாரேவை விமர்சிப்பதா? ராகுலுக்கு மோடி கண்டனம்
- ரிஷிவந்தியம் தொகுதியில் அதிகளவில் பெண்கள் ஓட்டளித்...
- தலைவர்கள் சிலையை மறைத்து கட்டப்பட்ட துணிகள் அகற்ற...
- 2 ஜி வழக்கில் கருணாநிதி, சிதம்பரத்தையும் சேர்க்க ச...
- பணம்..பணம்-மதுரை மேற்கு தொகுதியில் மத்திய உளவுப் ப...

No comments:
Post a Comment